தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஆர்பிஐ தங்க கையிருப்பின் மதிப்பு சுமார் ரூ.12,000 கோடி அதிகரிப்பு

ஆர்பிஐ தங்க கையிருப்பின் மதிப்பு சுமார் ரூ.12,000 கோடியாக அதிகரிப்பு.

News image
தங்கம் கையிருப்பு
Updated On :19 ஏப்ரல் 2025, 12:36 pm

இணையதளச் செய்திப் பிரிவு

நாட்டின் மத்திய ரிசர்வ் வங்கியின் தங்க கையிருப்பு மதிப்பு ஏப்ரல் 11ஆம் தேதியுடன் முடிந்த ஒரு வாரத்தில் ரூ.12,000 கோடி அளவுக்கு அதிகரித்துள்ளது.

பொருளாதார நிலையற்றத் தன்மை, உலக நாடுகளிடைய ஏற்பட்டிருக்கும் பதற்றம் போன்றவற்றால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கடுமையாக அதிகரித்திருக்கும் நிலையில் ஆர்பிஐ இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்ட தரவுகளின்படி, ஆர்பிஐ வங்கியின் கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு கடந்த ஒரு வாரத்தில் ரூ.11,986 கோடியாக அதிகரித்துள்ளது. இதன் மூலம், ஆர்பிஐ வங்கியின் கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு ரூ.6,88,496 கோடியாக உயர்ந்திருப்பதாகவும் ஏஎன்ஐ செய்தி தெரிவிக்கிறது.

தங்கக் கையிருப்பின் மதிப்பு அதிகரிப்பு கடந்த ஓராண்டாகவே தொடர்ந்து நடந்து வருகிறது. அதன்படி, கடந்த ஓராண்டில் மட்டும் ஆர்பிஐ கையிருப்பில் இருக்கும் தங்கத்தின் மதிப்பு கிட்டத்தட்ட மூன்று மடங்காகியிருப்பதாகவும், இதனுடன், மத்திய ரிசர்வ் வங்கி, தங்கக் கையிருப்பை அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் நிலவும் பல்வேறு அபாயங்கள் காரணமாக, இந்தியா, வெளிநாட்டு வங்கிகளில் வைத்திருந்த தங்கக் கையிருப்பை சொந்த நாட்டுக்கு மாற்றும் நடவடிக்கையையும் மேற்கொண்டது.

பொருளாதார நிலையற்ற தன்மை நிலவும் நிலையில், தங்கம் மட்டுமே, ஒரு பாதுகாப்பான சொத்தாக இருக்கும் என்பது பரவலான கருத்து. ஒருபக்கம் அமெரிக்க - சீன வர்த்தகப் போரின் காரணமாக, அமெரிக்க டாலர் மதிப்புக் குறைய நேரிடலாம் என்பதால், இந்தியா, தங்கக் கையிருப்பை மேலும் அதிகரிப்பது குறித்து திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.