தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி உதவித்தொகை விடுவிப்புஇந்திய பொருள்கள் மீது 100% வரி: மசோதாவில் கையெழுத்திட்டார் டொனால்ட் டிரம்ப்!யுபிஐ கட்டணம்! 40 காசு செலுத்தினால் செத்துவிட மாட்டீர்கள் - நீதி ஆயோக் துணைத் தலைவர்

ஜம்மு - காஷ்மீரில் வெள்ளம்: 3 பேர் பலி; 100-க்கும் மேற்பட்டோர் மீட்பு!

ஜம்மு காஷ்மீரில் கனமழை தொடர்பாக...

சேற்றில் உள்ள சிக்கியுள்ள வாகனங்கள்.

Published On :

ஜம்மு - காஷ்மீரில் ராம்பன் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலியான நிலையில் 100-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு - காஷ்மீரில் பெய்து வரும் தொடர் மழையால், ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நஷ்ரி - பனிஹால் பகுதிகளுக்கு இடையே நிலச்சரிவுகள் மற்றும் மண்சரிவுகள் ஏற்பட்டதில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளன.

ராம்பன் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ பாக்னா கிராமத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பில் சிக்கி சகோதர்கள் அகிப் அகமது, முகமது சாகிப் உள்ளிட்ட 3 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடைசியாக வெளியான தகவலின்படி, இக்கிராமத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு பகுதியில் இரண்டு நாள்களில் மழை தொடர்பான சம்பவங்களில் 5 பேர் பலியாகியுள்ளனர். நேற்றிரவு(ஏப். 19) ரியாசி மாவட்டத்தின் அர்னாஸ் பகுதியில் மின்னல் தாக்கியதில் ஒரு பெண் உள்பட இருவர் பலியாகினர், மற்றொரு பெண் காயமடைந்தார்.

தரம் குண்ட் கிராமத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சுமார் 40 குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதாகவும் 10 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் மற்றவை பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர் மழை மற்றும் மேக வெடிப்புகளை பொருட்படுத்தாமல் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், இதில் சிக்கிய 100-க்கும் மேற்பட்ட கிராம மக்களை மீட்டனர்.

கனமழை, மேக வெடிப்பு, நிலச்சரிவு, ஆலங்கட்டி மழை ஆகியவற்றால் ராம்பன் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதாக மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.