21ஆவது மாடியிலிருந்து 7 மாத குழந்தை தவறி விழுந்து பலி!

மகாராஷ்டிரத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஜன்னலை மூட முயன்றபோது, குழந்தை தவறி கீழே விழுந்ததாகத் தகவல்
கோப்புப் படம்
கோப்புப் படம்ENS
Published on
Updated on
1 min read

மகாராஷ்டிரத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஜன்னலை மூட முயன்றபோது, குழந்தை தவறி கீழே விழுந்து பலியான சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரத்தின் பால்கர் மாவட்டத்தில் விரார் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பின் 21ஆவது மாடியில் இருந்து 7 மாத ஆண்குழந்தை தவறி விழுந்து உயிரிழந்தது. இந்த சம்பவத்தினையடுத்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுகுறித்து, காவல்துறையினர் தெரிவித்ததாவது, அடுக்குமாடிக் குடியிருப்பின் 21ஆவது மாடியில் திறந்த ஜன்னலின் கதவுகளை மூட முயன்றபோது, தாயின் தோளில் இருந்த 7 மாத ஆண்குழந்தை எதிர்பாராதவிதமாகத் தவறி, மேலிருந்து கீழே விழுந்தது.

இதனையடுத்து, குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்தபோதிலும், குழந்தை உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர். இந்த சம்பவம் குறித்து, வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது என்று கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com