குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

மகாராஷ்டிரம்: திருமண நிகழ்வில் மகளை சுட்டுக்கொன்ற ஓய்வுபெற்ற சிஆர்பிஎஃப் அதிகாரி

மகாராஷ்டிரத்தில் திருமண நிகழ்வின்போது மகளை சுட்டுக்கொன்ற ஓய்வுபெற்ற சிஆர்பிஎஃப் அதிகாரியால் பரபரப்பு நிலவியது.

News image

கோப்புப்படம்.

Updated On :27 ஏப்ரல் 2025, 2:57 pm IST

மகாராஷ்டிரத்தில் திருமண நிகழ்வின்போது மகளை சுட்டுக்கொன்ற ஓய்வுபெற்ற சிஆர்பிஎஃப் அதிகாரியால் பரபரப்பு நிலவியது.

மகாராஷ்டிர மாநிலம், சோப்டா வட்டத்தில் சனிக்கிழமை இரவு திருமண நிகழ்ச்சியில் திரிப்தி-அவினாஷ் தம்பதியும் பங்கேற்றிருந்தனர்.

அப்போது அங்கு வந்த ஓய்வுபெற்ற சிஆர்பிஎஃப் அதிகாரி கிரண் மாங்கிள்(50) தனது மகள் திரிப்தியைக் சுட்டுக்கொன்றார்.

மேலும் இந்த சம்பவத்தில் அவரது கணவர் அவினாஷும் பலத்த காயமடைந்தார்.

இதுகுறித்து ஜல்கானின் போலீஸ் அதிகாரி கூறுகையில், "தம்பதியர் அங்கு இருப்பதை அறிந்ததும் கிரண் திருமண மண்டபத்திற்கு வந்தார். துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, அருகிலுள்ள மக்கள் கிரணை கீழே தள்ளி அவரைத் தாக்கினர். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிரண் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிரணின் செயலுக்கு என்ன காரணம் என்பது குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று தெரிவித்தார். திரிப்தி-அவினாஷ் தம்பதிக்கு ஒரு ஆண்டு முன்பு திருமணம் நடந்த நிலையில் அவர்கள் புணேவில் வசித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.