குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பஹல்காம் தாக்குல்: பலியானவரின் குடும்பத்தினரை சந்தித்த ராகுல்!

பஹல்காம் தாக்குலில் பலியானவரின் குடும்பத்தினரை ராகுல் காந்தி சந்தித்தது பற்றி...

News image
பஹல்காம் தாக்குதலில் பலியானவரின் குடும்பத்தினருடன் ராகுல் காந்தி - PTI
Updated On :30 ஏப்ரல் 2025, 11:44 am

DIN

பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆறுதல் கூறினார்.

உத்தரப் பிரதேசம் ரேபரேலி மற்றும் அமேதி மக்களவை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் ராகுல் காந்தி இரண்டு நாள்கள் சுற்றுப் பயணமாக சென்றுள்ளார். நேற்று தனது சொந்த தொகுதியாக ரேபரேலியில் ஆய்வு மேற்கொண்ட அவர், இன்று அமேதி தொகுதியில் பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்து ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து, கான்பூர் சென்ற ராகுல் காந்தி, பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட சுபம் திவேதி என்பவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போது அங்கு கூடியிருந்த செய்தியாளர்களிடம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சிறப்புக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில், பஹல்காம் தாக்குதல் தொடர்பாக இன்றிரவு 7 மணியளவில் செய்தியாளர்களைச் சந்தித்து ராகுல் காந்தி பேசவுள்ளார்.

முன்னதாக, பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க சுற்றுப்பயணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு நாடுதிரும்பிய ராகுல் காந்தி காங்கிரஸ் செயற்க்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

பின்னர், ஜம்மு - காஷ்மீருக்குச் சென்ற ராகுல் காந்தி தாக்குதலில் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

மேலும், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிர்க்கட்சிகள் உடன் நிற்கும் என்று ராகுல் காந்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.