குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

தில்லியில்.. 8 வங்கதேசத்தினர் உள்பட 22 வெளிநாட்டவர் வெளியேற்றம்!

தில்லியில் 22 வெளிநாட்டவர் தங்களது தாயகங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது குறித்து...

கோப்புப் படம்

Published On :6 ஆகஸ்ட் 2025, 5:09 pm IST

தில்லியில், சட்டவிரோதமாக குடியேறிய 8 வங்கதேசத்தினர் உள்பட 22 வெளிநாட்டவர், தங்களது தாயகங்களுக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியின் துவாரகா பகுதியில், விசா உள்ளிட்ட உரிய ஆவணங்களின்றி சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறி வசித்த 22 வெளிநாட்டவரை, அம்மாநில காவல் துறையினர் கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூலை மாதம் அவர்கள் அனைவரும், இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்டு, தங்களது தாயகங்களுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாடுகடத்தப்பட்டவர்களில், வங்கதேசம் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா 8 பேரும், ஐவரி கோஸ்ட் நாட்டைச் சேர்ந்த 3 பேரும், லைபீரியாவைச் சேர்ந்த 2 பேரும் மற்றும் செனீகல் நாட்டைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 22 பேர் தங்களது தாயகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இதில், சிலர் தங்களது விசா காலாவதியான பின்னரும் இந்தியாவில் வசித்து வந்ததாகவும், அவர்கள் அனைவரும் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்ட பின்னர் ஜூலையில் வெளியேற்றப்பட்டதாகவும், துவாரகா காவல் துறை உயர் அதிகாரி அங்கித் சிங் கூறியுள்ளார்.

Summary

It has been reported that 22 foreigners, including 8 Bangladeshis, who were illegally residing in Delhi have been sent back to their homelands.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.