தர்மம் - சமூக அமைதிக்கான வழிகாட்டி: மோகன் பாகவத்!

தர்மத்தின் பன்முகத்தன்மை உலகிற்குத் தேவை..
மோகன் பாகவத்
மோகன் பாகவத் PTI
Published on
Updated on
1 min read

தர்மம் என்பது உண்மை, புனிதமான செயல். பொறுப்புடன் பாதையைப் பின்பற்றுவதற்கும், சமூகத்தை அமைதியாக வைத்திருக்கவும் உதவும் என்று ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத் தலைவர் மோகன் பாகவத் கூறினார்.

தர்ம ஜாக்ரன் நியாஸ் அலுவலகத்தின் திறப்பு விழாவில் பேசிய அவர்,

தர்மத்தைப் பின்பற்றுவதும் அதில் உறுதியாக இருப்பதும் நெருக்கடிக் காலங்களில் மக்களுக்கு தைரியத்தையும் உறுதியையும் பெற உதவுகிறது.

தர்மத்திற்கான உங்கள் அர்ப்பணிப்பு உறுதியானது என்றால், நீங்கள் ஒருபோதும் தைரியத்தை இழக்க மாட்டீர்கள். சத்ரபதி சாம்பாஜி மகாராஜின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட 'சாவா' திரைப்படத்தை அனைவரும் பார்த்திருக்கிறார்கள்.

பெரியவர்கள் மட்டுமல்ல, சாதாரண மக்களும் கூட தர்மத்திற்கு உறுதியுடன் இருக்க தங்களைத் தியாகம் செய்துள்ளனர். அறத்தின் பாதையிலிருந்து மக்கள் விலகாமல் பார்த்துக் கொள்வது சமூகத்தின் பொறுப்பு என்று பாகவத் கூறினார்.

இந்து மதம் போன்ற பன்முகத்தன்மைகளை நிர்வகிக்கும் தர்மம் உலகிற்குத் தேவை. தர்மம் ஒருமையைக் கற்பிக்கிறது மற்றும் பன்முகத்தன்மைகளை ஏற்றுக்கொள்ள அனுமதிக்கிறது.

நாம் பன்முகத்தன்மை கொண்டவர்கள் ஆனால் ஒருவருக்கொருவர் வேறுபட்டவர்கள் அல்ல. நாம் வித்தியாசமாகத் தோன்றினாலும், ஒரே மாதிரியாக இருக்கிறோம் என்பதே இறுதி உண்மை என்று அவர் கூறினார்.

Summary

Rashtriya Swayamsevak Sangh (RSS) chief Mohan Bhagwat on Wednesday said dharm is the truth and a pious work and following the path with responsibility will help to keep the society peaceful.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com