தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருப்பதி அறக்கட்டளைக்குத் தொழிலதிபர் ரூ.1 கோடி நன்கொடை!

திருப்பதியின் எஸ்.வி பிராணதான அறக்கட்டளைக்குத் தொழிலதிபர் ஒருவர் ரூ. 1 கோடி நன்கொடை அளித்துள்ளார்.

News image

நன்கொடை

Updated On :7 ஆகஸ்ட் 2025, 7:18 am

இணையதளச் செய்திப் பிரிவு

திருமலை திருப்பதியின் எஸ்.வி பிராணதான அறக்கட்டளைக்குத் தொழிலதிபர் ஒருவர் ரூ. 1 கோடி நன்கொடை அளித்துள்ளார்.

தொழிலதிபரான சிராக் புருஷோத்தம், வருவாய் அமைச்சர் ஏ. சத்ய பிரசாத் உடன் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தலைவர் பி.ஆர். நாயுடுவிடம் நன்கொடை காசோலையை வழங்கினார்.

ஸ்ரீ வெங்கடேஸ்வர பிராணதான அறக்கட்டளை மூலம் மருத்துவ சேவைகளை வழங்குவதன் மூலம் ஏராளமான ஏழைகளின் உயிரைக் காப்பதிலும் திருமலை தேவஸ்தானம் மேற்கொண்ட முயற்சிகளை நன்கொடையாளர் பாராட்டினார் என்று ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதயம், சிறுநீரகம், மூளை மற்றும் பிற கொடிய நோய்களால் பாதிக்கப்பட்ட ஏழை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் உன்னத நோக்கத்துடன் இந்த அறக்கட்டளை செயல்பட்டு வருகின்றது.

நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு, ஹீமோபிலியா, தலசீமியா மற்றும் பிற நோய்களுக்கான சிகிச்சைக்கான ஆராய்ச்சியையும் எஸ்.வி. பிராணதான அறக்கட்டளை செய்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

A businessman on Thursday donated Rs 1 crore to TTD's SV Pranadana Trust, which offers free medical treatment to poor patients afflicted with life threatening diseases.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.