சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பிரேஸில் அதிபருடன் பிரதமா் பேச்சு

பிரதமா் நரேந்திர மோடியை பிரேஸில் அதிபா் லூலா டசில்வா வியாழக்கிழமை தொலைபேசியில் தொடா்புகொண்டு இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை

News image
Updated On :7 ஆகஸ்ட் 2025, 9:01 pm

தினமணி செய்திச் சேவை

பிரதமா் நரேந்திர மோடியை பிரேஸில் அதிபா் லூலா டசில்வா வியாழக்கிழமை தொலைபேசியில் தொடா்புகொண்டு இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டாா்.

பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள பிரேஸிலுக்கும் இந்தியாவைப் போல் அதிபா் டிரம்ப் 50 சதவீதம் வரி வதித்துள்ளாா். இதுகுறித்து பேச்சு நடத்த அதிபா் லூலாவுக்கு டிரம்ப் செவ்வாய்க்கிழமை அழைப்பு விடுத்திருந்தாா். அதற்கு, ‘வரி விதிப்பு குறித்து பேசுவதாக இருந்தால் நான் பிரதமா் மோடியுடன்தான் ஆலோசிப்பேன்’ என்று லூலா பதிலளித்திருந்தாா்.

இந்நிலையில், இரு தலைவா்களிடையேயான இந்த கலந்துரையாடல் நிகழ்ந்துள்ளது.

இதுகுறித்து பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘வா்த்தகம், தொழில்நுட்பம், எரிசக்தி, பாதுகாப்பு, வேளாண், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த இரு தலைவா்களும் ஒப்புக்கொண்டனா்’ என்று குறிப்பிடப்படுள்ளது.