இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு! நடப்பு கூட்டத்தொடரில் ரூ. 135 கோடி இழப்பு!

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று பிற்பகல் வரையில் ஒத்திவைப்பு

News image
மக்களவை
Updated On :8 ஆகஸ்ட் 2025, 7:02 am

இணையதளச் செய்திப் பிரிவு

நடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் அமளியால் இரு அவைகளும் பிற்பகல்வரையில் ஒத்திவைக்கப்பட்டது.

ஜூலை 21 ஆம் தேதியில் தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்கக் கோரி, இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வந்த நிலையில், அதுதொடர்பான விவாதம் நடைபெற்றது.

இந்த நிலையில், பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி குறித்தும் விவாதிக்கக் கோரி, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களவையில் இன்று கேள்விநேரத்தின்போது, பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், அவையை பிற்பகல்வரையில் ஒத்திவைப்பதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்தார்.

இதனிடையே, மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதைக் கண்டித்த அவையின் துணைத் தலைவர் ஹரிவன்ஷ், தற்போதைய கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் அமளியால் 56 மணிநேரம் 49 நிமிடங்கள் இழக்கப்பட்டதாகக் கூறி, மாநிலங்களவையையும் பிற்பகல்வரையில் ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் ஒரு நிமிடத்துக்கு ரூ. 2.5 லட்சம் செலவிடப்படுவதாக 2012-ல் மதிப்பீடு வெளியிடப்பட்டது. அப்படியென்றால், தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத்துக்கு ஒரு நிமிடத்துக்கு ரூ. 4 லட்சம்வரையில் செலவிடப்படலாம் என்று கணிக்கப்படுகிறது.

இதன்படி, ஒரு மணிநேரத்துக்கு நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டால், ரூ. 2.4 கோடி செலவாகும்; 56 மணிநேரம் 49 நிமிடங்களுக்கு ரூ. 135.6 கோடி இழக்கப்படுகிறது.

summary

Parliament Monsoon Session Day 14: Both Houses adjourned for the day

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.