நாடாளுமன்ற வளாகத்தில் பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிராக எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எழுப்பியுள்ள வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு மற்றும் பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஆனால், அவைத் தலைவர்கள் மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் நான்கு வாரங்களாக பதாகைகளுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இன்று நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கணக்கான எம்பிக்கள் கலந்துகொண்டனர்.
இதில், காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் மிண்டா தேவி என்ற பெயர் மற்றும் புகைப்படம் இடம்பெற்ற டி-சர்ட் அணிந்து போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
அந்த டி-சர்ட்டின் பின்புறம் ’124 நாட் அவுட்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
யார் இந்த மிண்டா தேவி?
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட வாக்குத் திருட்டு குற்றச்சாட்டில், பிகாரைச் சேர்ந்த மிண்டா தேவி என்ற பெயர் இடம்பெற்றிருந்தது.
மிண்டா தேவி என்ற 124 வயது மூதாட்டியின் பெயர் சமீபத்தில் வெளியிடப்பட்ட பிகார் வாக்காளர் வரைவு பட்டியலில் தரௌண்டா சட்டப்பேரவை தொகுதியின் கீழ் இடம்பெற்றிருந்தது.
உலகளவில் 115 வயது நபரே வயதானவர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவரைவிட 9 வயது பெரியவராக இருக்கும் மிண்டா தேவி என்பவர் எப்படி உயிருடன் இருக்க முடியும் எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
இதுபோன்று, பல வாக்காளர்கள் முறைகேடாக சேர்க்கப்பட்டு, வாக்குத் திருட்டில் பாஜக ஈடுபடுவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தார்.

Summary
Opposition MPs protested against the Bihar Electoral Roll Special Amendment in the Parliament complex.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நாடாளுமன்றத்தில் விவாதம் இல்லை; மசோதாக்கள் மட்டுமே நிறைவேற்றம்! காங்கிரஸ்

ஆட்சியா் அலுவலக வளாகத்தில் போராட்டம் நடத்தத் தடை: அரசு ஊழியா் சங்கங்கள் எதிா்ப்பு
திருத்தணி முருகன் கோயிலில் மயங்கி விழுந்தவா் உயிரிழப்பு

நாடாளுமன்ற வளாகத்தில் முன்னாள் ஆளுநா் புரோஹித்தை காத்திருக்க வைத்த அதிகாரிகள்!
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



