காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

தில்லி உயர் நீதிமன்றத்தில் புதிய நீதிபதி பதவியேற்பு! எண்ணிக்கை 44 ஆக உயர்வு!

தில்லி உயர் நீதிமன்றத்தில் புதிய நீதிபதி பதவியேற்றுள்ளதைப் பற்றி...

News image

கோப்புப் படம்

Updated On :12 ஆகஸ்ட் 2025, 11:35 am IST

தில்லி உயர் நீதிமன்றத்தில், புதியதாக மேலும் ஒரு நீதிபதி நியமனம் செய்யப்பட்டு, பதவியேற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி உயர் நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக, விமல் குமார் யாதவ், இன்று (ஆக.12) பதவியேற்றுள்ளார். இதன்மூலம், அந்த உயர் நீதிமன்றத்திலுள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

தில்லி மாவட்டத்தின் ஓய்வு பெற்ற நீதித் துறை அதிகாரியான நீதிபதி விமல் குமார் யாதவ், பதவி உயர்வு செய்யப்பட்டு, தில்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக, ஹிந்தி மொழியில் பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா, நீதிபதி விமல் குமார் யாத்விற்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

முன்னதாக, தில்லி உயர் நீதிமன்றத்தில் 60 நீதிபதிகள் வரை பதவி வகிக்க அனுமதியுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் மட்டும் அங்கு 9 புதிய நீதிபதிகள் பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

It has been reported that another new judge has been appointed and sworn in at the Delhi High Court.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.