இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

வாக்குத் திருட்டு: பிகாரில் பாஜக தலைவர்களுக்கு 2 வாக்காளர் அட்டைகள்! - தேஜஸ்வி யாதவ்

தேர்தல் ஆணையத்தின் மீது ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு...

News image

தேஜஸ்வி யாதவ் - ENS

Updated On :13 ஆகஸ்ட் 2025, 4:30 pm IST

தேர்தல் நடைபெறவுள்ள பிகாரில் பாஜக தலைவர்கள் 2 வாக்காளர் அடையாள அட்டைகளைப் பெற தேர்தல் ஆணையம் உதவுவதாக ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.

தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றன. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வாக்காளர்கள் குறித்த பல்வேறு தரவுகளையும் கேள்வி எழுப்பி வருகின்றன.

இந்நிலையில் பிகார் துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான விஜய்குமார் சின்ஹா இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகளை வைத்திருந்ததாக தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து பிகாரில் பாஜக தலைவர்களும் இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகளைப் பெற தேர்தல் ஆணையம் உதவுவதாகவும் அவர்களுக்கு இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகளை தேர்தல் ஆணையமே வழங்குவதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

குஜராத் மக்கள், பிகார் மாநில வாக்காளர்களாக மாறி வருகின்றனர். பாஜகவின் பொறுப்பாளரான பிகுபாய் தல்சானியா பாட்னாவின் வாக்காளராக மாறிவிட்டார். அவர் 2024 ஆம் ஆண்டு குஜராத்தில் வாக்களித்தார். அதன்பின்னர் அவர் பெயர் நீக்கப்பட்டு தற்போது பாட்னாவில் வாக்காளர் பட்டியலில் இணைந்துள்ளார். 5 ஆண்டுகள்கூட ஆகவில்லை, அவர் பிகார் தேர்தலிலும் வாக்களிக்க உள்ளார். பிகார் தேர்தல் முடிந்தபிறகு அவர் பெயர் அங்கு நீக்கப்பட்ட பிறகு மீண்டும் எங்கு செல்வார்? இந்த சதித்திட்டத்தை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்துகொண்டு பாஜக மிகப்பெரிய நேர்மையற்ற செயல்களைச் செய்கிறது.

பிகாரில் வாக்குத் திருட்டு நடக்கிறது. பாஜகவுடன் சேர்ந்துகொண்டு தேர்தல் ஆணையம் இந்த சதித் திட்டத்தை செயல்படுத்துகிறது. இது மிகத் தீவிரமான பிரச்னை" என்று பேசியுள்ளார்.

Summary

Vote chori row: Tejashwi Yadav says EC helping BJP leaders with 2 voter cards in poll-bound Bihar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.