சத்தீஸ்கர் மாநிலத்தில், கூட்டாக ரூ.1.16 கோடி வெகுமதி அறிவித்து தேடப்பட்ட நக்சல்கள் 2 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கரில், தண்டகாரன்யா சிறப்பு மண்டல ஆணையத்தின் உறுப்பினரான விஜய் ரெட்டி என்பவரை ரூ.90 லட்சம் வெகுமதியும் மற்றும் ராஜ்நந்த்காவோன் - கான்கர் எல்லைப் பிரிவின் செயலாளர் லோகேஷ் சலாமே என்பவரை ரூ.26 லட்சம் வெகுமதியும் அறிவித்து அரசுப் படைகள் தேடி வந்தன.
இந்நிலையில், மொஹ்லா-மன்பூர்-அம்பாகார் சௌக்கி மாவட்டத்தின் வனப்பகுதியில், மாநில காவல் துறை, மாவட்ட ரிசர்வ் காவல் படை மற்றும் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையினர் நேற்று (ஆக.13) நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அப்போது, அங்கு பதுங்கியிருந்த நக்சல்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
இதில், கூட்டாக ரூ.1.16 கோடி வெகுமதி அறிவித்து தேடப்பட்ட நக்சல்களான விஜய் ரெட்டி மற்றும் லோகேஷ் சலாமே ஆகியோர் சுட்டுக்கொல்லட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அதிகாரிகள் கூறுகையில், கொல்லப்பட்ட விஜய் ரெட்டியை 4 மாநில காவல் துறையினர் தேடி வந்ததாகவும், அதற்காக சத்தீஸ்கர் காவல் துறையினர் ரூ.25 லட்சமும், மகாராஷ்டிர காவல் துறையினர் ரூ.25 லட்சமும், தெலங்கானா காவல் துறையினர் ரூ.20 லட்சமும் ஆந்திர காவல் துறையினர் ரூ.20 லட்சமும் வெகுமதிகளாக அறிவித்திருந்ததாகக் கூறியுள்ளனர்.
இதேபோல், லோகேஷ் சலாமியை பிடிக்க, சத்தீஸ்கர் காவல் துறை ரூ.10 லட்சமும், மகாராஷ்டிர காவல் துறை ரூ.16 லட்சமும் வெகுமதிகளாக அறிவித்திருந்தது தெரியவந்துள்ளன.
இத்துடன், அவர்களிடம் இருந்து ஏராளமான துப்பாக்கிகள் மற்றும் வாக்கி டாக்கி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
In Chhattisgarh, two Naxalites who were wanted with a combined reward of Rs 1.16 crore have been shot dead by security forces.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







