பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்றுச் சான்று ஆபரேஷன் சிந்தூர்! - குடியரசுத் தலைவர்

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்றுச் சான்று ஆபரேஷன் சிந்தூர் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளதைப் பற்றி...
சுதந்திர நாள் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
சுதந்திர நாள் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
Published on
Updated on
1 min read

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்றுச் சான்று ஆபரேஷன் சிந்தூர் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வியாழக்கிழமை உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், “நாட்டைப் பாதுகாக்கும் போது, எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள நமது ஆயுதப்படைகள் தயாராக உள்ளன என்பதை ஆபரேஷன் சிந்தூர் காட்டியது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியாவின் பதிலடியான ஆபரேஷன் சிந்தூர், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒரு வரலாற்றுச் சான்றாக நினைவுகூரப்படும்.

ஏப்ரல் மாதம் பஹல்காமில் அப்பாவி குடிமக்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் கோழைத்தனமானது. இது முற்றிலும் மனிதாபிமானமற்றது. ஆனால், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம் பதிலடி கொடுக்கப்பட்டது.

நாங்கள் யாருடைய இடத்தையும் ஆக்கிரமிக்க மாட்டோம். ஆனால், எங்கள் மக்களைப் பாதுகாப்பதற்காக பதிலடி கொடுக்கவும் தயங்க மாட்டோம். நம்மைப் பிரிக்க விரும்புபவர்களுக்கு சரியான பதிலடி இது” எனத் தெரிவித்தார்.

Summary

Op Sindoor historic example in fight against terror: President in I-Day speech

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com