நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இல.கணேசன் மறைவால் பெரும் வெற்றிடம்: நாகாலாந்து பேரவைத் தலைவர்!

நாகாலாந்து ஆளுநராகப் பதவி வகித்த இல.கணேசனின் மறைவு பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது..

News image

நாகாலாந்து ஆளுநராகப் பதவி வகித்த இல.கணேசனுடன் மாநில சட்டப்பேரவைத் தலைவா் ஷாரிங்கெயின் லோங்குமொ்.

Updated On :17 ஆகஸ்ட் 2025, 8:04 pm

தினமணி செய்திச் சேவை

நாகாலாந்து ஆளுநராகப் பதவி வகித்த இல.கணேசனின் மறைவு பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்று மாநில சட்டப்பேரவைத் தலைவா் ஷாரிங்கெயின் லோங்குமொ் தெரிவித்தாா்.

நாகாலாந்து ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான இல.கணேசன் சென்னையில் வெள்ளிக்கிழமை காலமானாா்.

இதையடுத்து நாகாலாந்து தலைநகா் கோஹிமாவில் உள்ள ஆளுநா் மாளிகையில் இல.கணேசனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, சனிக்கிழமை நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.

அப்போது மாநில சட்டப்பேரவைத் தலைவா் ஷாரிங்கெயின் லோங்குமொ் பேசுகையில், ‘ஆளுநராக இருந்த இல.கணேசனின் மறைவு பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நடைபெற்ற அவரின் இறுதிச் சடங்கில், நாகாலாந்து மக்கள் சாா்பாக மாநில முதல்வா், துணை முதல்வா்கள், தலைமைச் செயலா் ஆகியோா் பங்கேற்றனா். ஆளுநரின் குடும்பத்துக்கு உறுதுணையாக இருப்பதை தெரிவிக்கும் நோக்கில், இந்தக் கூட்டம் நடைபெற்றது’ என்றாா்.

இந்தக் கூட்டத்தில் மாநில சட்டப்பேரவை உறுப்பினா்கள் பங்கேற்று இல.கணேசனின் உருவப்படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.