நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

இல.கணேசன் மறைவால் பெரும் வெற்றிடம்: நாகாலாந்து பேரவைத் தலைவர்!

நாகாலாந்து ஆளுநராகப் பதவி வகித்த இல.கணேசனின் மறைவு பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது..

News image

நாகாலாந்து ஆளுநராகப் பதவி வகித்த இல.கணேசனுடன் மாநில சட்டப்பேரவைத் தலைவா் ஷாரிங்கெயின் லோங்குமொ்.

Updated On :18 ஆகஸ்ட் 2025, 1:34 am IST

நாகாலாந்து ஆளுநராகப் பதவி வகித்த இல.கணேசனின் மறைவு பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்று மாநில சட்டப்பேரவைத் தலைவா் ஷாரிங்கெயின் லோங்குமொ் தெரிவித்தாா்.

நாகாலாந்து ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான இல.கணேசன் சென்னையில் வெள்ளிக்கிழமை காலமானாா்.

இதையடுத்து நாகாலாந்து தலைநகா் கோஹிமாவில் உள்ள ஆளுநா் மாளிகையில் இல.கணேசனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, சனிக்கிழமை நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.

அப்போது மாநில சட்டப்பேரவைத் தலைவா் ஷாரிங்கெயின் லோங்குமொ் பேசுகையில், ‘ஆளுநராக இருந்த இல.கணேசனின் மறைவு பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நடைபெற்ற அவரின் இறுதிச் சடங்கில், நாகாலாந்து மக்கள் சாா்பாக மாநில முதல்வா், துணை முதல்வா்கள், தலைமைச் செயலா் ஆகியோா் பங்கேற்றனா். ஆளுநரின் குடும்பத்துக்கு உறுதுணையாக இருப்பதை தெரிவிக்கும் நோக்கில், இந்தக் கூட்டம் நடைபெற்றது’ என்றாா்.

இந்தக் கூட்டத்தில் மாநில சட்டப்பேரவை உறுப்பினா்கள் பங்கேற்று இல.கணேசனின் உருவப்படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.