ஒடிஸா முன்னாள் முதல்வரும் பிஜு ஜனதா தள கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக் மருத்துவமனையில் இருந்தவாறு இன்று (ஆக. 18) விடியோ வெளியிட்டுள்ளார்.
சிகிச்சைக்காக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தான் நலமுடன் இருப்பதாகவும், நலம் பெற வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் விடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
ஒடிஸா எதிர்க்கட்சித் தலைவரான நவீன் பட்நாயக்கிற்கு (78), நீர்ச்சத்துக் குறைபாடு காரணமாக சனிக்கிழமை இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் ஞாயிற்றுக்கிழமை மாலை புவனேஸ்வரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை முடிந்து இன்று மாலை வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் இருந்தவாறு விடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.
பிஜு ஜனதா தளம் பகிர்ந்துள்ள இந்த விடியோவில், ''சம் மருத்துவமனையில் நான் (நவீன் பட்நாயக்) அனுமதிக்கப்பட்டுள்ளேன். மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் என்னை மிகச்சிறப்பாக கவனித்துக்கொள்கின்றனர். உங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி. நீங்கள் என்னை நேரில் வந்து சந்திக்க விரும்பினால், நவீன் நிவாஸ் (நவீன் பட்நாயக் வீடு) என்றுமே உங்களை வரவேற்றவாறு இருக்கும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்பு கழுத்துவடத்தில் ஏற்பட்ட பிரச்னைக்காக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நவீன் பட்நாயக்கிற்கு, கடந்த ஜூன் 12ஆம் தேதி முதுகெலும்பில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஜூலை 22 ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
இதையும் படிக்க | டிரம்ப்புடன் பேசியது என்ன? பிரதமர் மோடியுடன் பகிர்ந்த ரஷிய அதிபர்!
Summary
Former Odisha chief and BJD chief Naveen Patnaik video from hospital
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெளியானது ஏகாவலி பாடல்!

மேதாந்தாவுக்கு மாற்றப்படுவதற்கு முன் சஃப்தா்ஜங் மருத்துவமனையில் துன்புறுத்தல்: வாங்சுக் புகாா்

சேலம் அரசு மருத்துவமனையில் நோயாளியின் உறவினா்களிடம் பணம் வசூல்?

நான் அப்படிப்பட்டவன் இல்லை.... மன்னிப்பு கேட்ட மகேந்திரன்!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



