மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருப்பதி கோயிலுக்கு 121 கிலோ தங்கம் வழங்கிய பக்தர்! மதிப்பு ரூ.140 கோடி!

திருப்பதி திருமலை கோயிலுக்கு பக்தர் ஒருவர் 121 கிலோ தங்கம் நன்கொடையாக வழங்கியது குறித்து...

News image
திருமலை கோயில்- கோப்புப் படம்
Updated On :19 ஆகஸ்ட் 2025, 12:45 pm

இணையதளச் செய்திப் பிரிவு

திருப்பதி ஸ்ரீ வெங்கடாசலபதி கோயிலுக்கு பக்தர் ஒருவர் 121 கிலோ தங்கத்தை நன்கொடையாக வழங்கியுள்ளதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

இதன் மதிப்பு ரூ.140 கோடி என்றும், தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதன் நன்றிக்கடனாக, அவர் இதனைச் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்திற்குட்பட்ட மங்களகிரியில் வறுமை ஒழிப்புத் திட்டம் தொடர்பான அரசு நிகழ்ச்சியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டார்.

விழாவில் பேசிய அவர், ''சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என திருப்பதியில் வேண்டிக்கொண்ட பக்தர், சுவாமிக்கு தற்போது, 121 கிலோ தங்கத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார். இதன் மதிப்பு ரூ.140 கோடி. தொழில் தொடங்கி அதில் ஏற்பட்ட முன்னேற்றத்திற்கான நன்றிக்கடனாக அவர் இதனைக் கோயிலுக்கு அளித்துள்ளார்'' எனக் குறிப்பிட்டார்.

சொந்தமாகத் தொடங்கிய நிறுவனத்தின் 60 சதவிகித பங்குகளை விற்றதன் மூலம் ரூ. 6000 கோடி வரை ஈட்டியதாகவும் இதனைக் கடவுள் கொடுத்ததால், அவருக்கு திருப்பிக் கொடுக்க அந்த பக்தர் முடிவு செய்ததாகவும் முதல்வர் தெரிவித்தார்.

திருப்பதி - திருமலை தேவஸ்தானத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமிக்கு நாள்தோறும் அணிவிக்கப்படும் தங்க அணிகலன்களின் நிறை 120 கிலோ என்பதை அறிந்த பக்தர், ஒரு கிலோ கூடுதலாக 121 கிலோ எடையுடைய தங்கத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

summary

Devotee to donate 121 kg gold to Lord Venkateswara Swamy: Andhra CM

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.