நமது நிருபர்
நிகழ் நிதியாண்டுக்கான நபார்டு வங்கியின் நிதியை விடுவிக்கக் கோரி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
அப்போது நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி உடன் இருந்தார். இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள பதிவில், 2025-26 நிதியாண்டில், நபார்டு வங்கியின் ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.4,500 கோடிக்கான நிதியையும், மீன்வள உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் குளச்சல் மீன்பிடித் துறைமுக விரிவாக்கத்திற்கு ரூ.350 கோடி நிதியையும் விரைந்து வழங்கிட ஒப்புதல் அளிக்குமாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வழங்கியதுடன் விரைவில் உரிய நிதியை வழங்கிட ஆவன செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
Summary
Tamil Nadu Finance Minister Thangam Thennarasu met Union Finance Minister Nirmala Sitharaman.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கலால் வரியைக் குறைக்காமல் இருந்திருந்தால் பெட்ரோல், டீசல் விலை ரூ. 10 உயர்ந்திருக்கும்: நிர்மலா சீதாராமன்

உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்

இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது தமிழ்நாடு! - தங்கம் தென்னரசு

தமிழகம் இழப்புகளைச் சந்திக்கும்: நிர்மலா சீதாராமன்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


