ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தைத் தீவிரப்படுத்திய எதிர்க்கட்சி எம்பிக்கள்!

பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தொடர்பாகத் தேர்தல் ஆணையத்திற்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்தியது..

News image
நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சியினர் போராட்டம்!
Updated On :19 ஆகஸ்ட் 2025, 7:15 am

இணையதளச் செய்திப் பிரிவு

பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தொடர்பாகத் தேர்தல் ஆணையத்திற்கு எதிரான தாக்குதலை எதிர்க்கட்சித் தலைவர்கள் செவ்வாய்க்கிழமை தீவிரப்படுத்தினர்.

முன்னதாக நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில், இன்றும் தேர்தல் ஆணையம், மத்திய அரசைக் கண்டித்து இந்தியா கூட்டணி எம்பிக்கள் தேர்தல் ஆணையர்களின் படங்களைக் கொண்ட பெரிய பதாகையை ஏந்தியும், தேர்தல் ஆணையத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் குழுவில் உள்ள மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோரின் படம் பொறிக்கப்பட்ட பதாகையில் வாக்குத் திருட்டு மற்றும் கண்ணுக்குத் தெரியாத மோசடி என்ற வார்த்தைகளும் எழுதப்பட்டிருந்தன.

நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த போராட்டத்திற்குக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமை தாங்கினார். அவருடன் அகிலேஷ் யாதவ், பிரியங்கா காந்தி வத்ரா உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்ற போராட்டத்தின் காணொளியை கார்கே எக்ஸில் பகிர்ந்துகொண்டார்.

தேர்தல் ஆணையம் அதன் அரசியலமைப்பு பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியாது. இந்தியா கூட்டணி சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் குறித்து ஆதாரங்களுடன் கேள்விகளை எழுப்பியுள்ளது, தேர்தல் ஆணையம் எதிர்க்கட்சிகளை மிரட்டுவதன் மூலம் அல்ல, விசாரணை மூலம் பதிலளிக்க வேண்டும்.

சாலைகளிலிருந்து நாடாளுமன்றம் வரை வாக்களிக்கும் உரிமைக்கான போராட்டம் தொடர்கிறது என்று அவர் இந்தியில் பதிவிட்டுள்ளார்.

summary

Opposition leaders on Tuesday stepped up their attack against the Election Commission over the voter roll revision in Bihar, with protesting MPs holding a huge banner carrying pictures of the election commissioners and raising slogans against the poll body.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.