உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!கைது நடவடிக்கையை காமெடியாக பார்கிறேன்! உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கையை காமெடியாக பார்கிறேன்! உதயநிதி ஸ்டாலின் உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!உதயநிதி ஸ்டாலின் கைது? நீலாங்கரை வீட்டின் முன்பு போலீஸ் குவிப்பு!தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்நாளை பட்ஜெட் தாக்கல்: இன்று மாலை தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்!இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

காப்பீடு பிரீமியம் தொகைக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க திட்டம்: வருவாய் பாதிக்கும் என மாநிலங்கள் கருத்து

News image

PTI

Updated On :23 செப்டம்பர் 2025, 12:17 pm IST

காப்பீடு பிரீமியம் தொகைக்கு சரக்கு-சேவை வரியில் (ஜிஎஸ்டி) இருந்து விலக்கு அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் இதனால் தங்கள் வருவாய் பாதிக்கும் என்று மாநில அரசுகள் கருத்துத் தெரிவித்துள்ளன.

தற்போது ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு பிரீமியம் தொகை மீது 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இது மத்திய, மாநில அரசுகளுக்கான ஜிஎஸ்டி வருவாய் குறிப்பிடத்தக்க அளவு பங்கு வகிக்கிறது.

இந்நிலையில், பிகாா் துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தலைமையிலான காப்பீடுகளுக்கான அமைச்சா்கள் குழு ஜிஎஸ்டி கவுன்சிலிடம் அறிக்கையை சமா்பித்துள்ளது. இதுதொடா்பாக சாம்ராட் சௌதரி கூறுகையில், ‘காப்பீடு பிரீமியம் மீது குறைந்த அளவுக்காவது ஜிஎஸ்டி வசூலிக்க வேண்டும் என்று உறுப்பினா்கள் வலியுறுத்தினா். ஏனெனில், முழுமையாக ஜிஎஸ்டி விலக்கு அளித்தால் மாநிலங்களில் வருவாய் பாதிக்கப்படும் என அவா்கள் கருத்துகின்றனா். அக்டோபா் மாத இறுதிக்குள் அமைச்சா்கள் குழு பரிந்துரை ஜிஎஸ்டி கவுன்சிலிடம் அளிக்கப்படும். அதன் பிறகு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றாா்.

2023-24 நிதியாண்டில் மத்திய, மாநில அரசுகளுக்கு ஆயுள் காப்பீடு பிரீமியம் மூலம் ரூ.8,262.94 கோடி ஜிஎஸ்டி வருவாய் கிடைத்தது. சுகாதார காப்பீடு மூலம் ரூ.1,484.36 கோடி கிடைத்தது.

தீபாவளிப் பண்டிகையின்போது ஜிஎஸ்டியை வெகுவாகக் குறைக்க இருப்பதாக பிரதமா் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.