ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

ஜார்க்கண்டில் 51 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை! முதல்வர் ஒப்புதல்!

ஜார்க்கண்டில் 51 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுவிக்கப்படுவது குறித்து...

News image

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் - (கோப்புப் படம்)

Updated On :22 ஆகஸ்ட் 2025, 9:23 pm IST

ஜார்க்கண்ட் மாநிலத்தில், சுமார் 51 ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலைச் செய்யும் திட்டத்துக்கு, அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் இன்று (ஆக.22) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அம்மாநிலத்தில் உள்ள வெவ்வேறு சிறைகளில் தண்டனை அனுபவித்து வரும் 103 சிறைக் கைதிகளின் வழக்குகள் விசாரிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, அந்தப் பட்டியலில் இடம்பெற்ற 51 ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலைச் செய்ய முதல்வர் ஹேமந்த் சோரன் ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த முடிவானது, அந்தக் கைதிகள் அனைவரையும் விசாரித்த சம்பந்தப்பட்ட நீதிமன்றங்கள், காவல் அதிகாரிகள், சிறை அதிகாரிகள் மற்றும் நன்னடத்தை அதிகாரிகள் ஆகியோரது கருத்துக்களைப் பெற்ற பிறகு எட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விடுதலைச் செய்யப்படும் கைதிகளின் குடும்பம், சமூகம், பொருளாதாரம் ஆகியவற்றின் பின்னணிகளை சரிபார்த்து, சிறையில் இருந்து விடுதலையான பின்னர் அவர்களது மறுவாழ்வுக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் சோரன் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, 2019-ம் ஆண்டு முதல் ஜார்க்கண்டின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்ட 619 கைதிகளை மாநில தண்டனை மறுஆய்வு வாரியம் விடுதலைச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Jharkhand Chief Minister Hemant Soren has approved the release of about 51 life-sentenced prisoners in the state.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.