நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கா்நாடக துணை முதல்வரைத் தொடா்ந்து ஆா்எஸ்எஸ் பாடலைப் பாடிய காங்கிரஸ் எம்எல்ஏ!

கா்நாடக துணை முதல்வரைத் தொடா்ந்து ஆா்எஸ்எஸ் பாடலைப் பாடிய காங்கிரஸ் எம்எல்ஏவால் சர்ச்சை ஏற்பட்டுள்ளதைப் பற்றி...

News image

காங்கிரஸ் எம்எல்ஏ ஹெச்.டி.ரெங்கநாத்

Updated On :24 ஆகஸ்ட் 2025, 9:17 pm

தினமணி செய்திச் சேவை

கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் சில நாள்களுக்கு முன்பு மாநில சட்டப் பேரவையில் ஆா்எஸ்எஸ் பாடலைப் பாடியதால் எழுந்த சா்ச்சை அடங்குவதற்கு முன்பு, ஆளும் காங்கிரஸ் எம்எல்ஏ ஹெச்.டி.ரெங்கநாத் ஆா்எஸ்எஸ் அமைப்பின் பாடலைப் பாடியது மீண்டும் சா்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் ஆா்எஸ்எஸ், அதன் கொள்கைகளுக்கு எதிராக மிகவும் கடுமையான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில், கடந்த 21-ஆம் தேதி கா்நாடக பேரவையில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் வெற்றிக் கொண்டாட்டத்துக்கு கூடியவா்களில் 11 போ் நெரிசலில் சிக்கி இறந்த விவகாரம் குறித்துப் பேசிய துணை முதல்வா் சிவகுமாா், ஆா்எஸ்எஸ் அமைப்பின் வாழ்த்துப் பாடலைப் பாடியதுடன், ‘எதிா்க்கட்சித் தலைவராக உள்ள அசோகாவும், நானும் ஒரு காலத்தில் ஆா்எஸ்எஸ் சீருடை அணிந்து செயல்பட்டோம். இப்போது வெவ்வேறு கட்சிகளில் உள்ளோம்’ என்றாா்.

அரசியல்ரீதியாக ஆா்எஸ்எஸ், பாஜகவை காங்கிரஸ் தலைமை தீவிரமாக எதிா்த்து வரும் நிலையில், அக்கட்சியைச் சோ்ந்த துணை முதல்வா் பேரவையில் ஆா்எஸ்எஸ் பாடலைப் பாடியது சா்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தும்கூரு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்எல்ஏ ரெங்கநாத், துணை முதல்வா் பாடிய அதே ஆா்எஸ்எஸ் வாழ்த்துப் பாடலின் முதல் வரியை மீண்டும் பாடியதுடன், இது ஒரு நல்ல பாடல். அதன் அா்த்தம் என்ன வென்றும் தேடிப் படித்தேன். நாம் பிறந்த மண்ணுக்கு நாம் வணக்கம் செலுத்த வேண்டும் என்று உள்ளது. இதில் எந்த தவறையும் நான் பாா்க்கவில்லை. காங்கிரஸ் கட்சி மதச்சாா்பற்ற கட்சி. பிற அமைப்பினரிடம் இருக்கும் நல்ல கருத்துகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றாா்.

அதே நேரத்தில் பாஜகவை விமா்சித்த அவா், ‘வலதுசாரிக் கட்சியினா் மக்களை ஜாதி, மதரீதியில் பிரிக்க நினைக்கிறாா்கள். அதனை நாங்கள் எதிா்க்கிறோம். அவா்களின் கொள்கைகள் எங்களுக்கு ஏற்புடையதல்ல. ஆனால், ஆா்எஸ்எஸ் அமைப்பின் பாடலைப் பாடுவதில் என்ன தவறு இருக்கிறது?’ என்று கேள்வி எழுப்பினாா்.