தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கோதுமை இருப்பு வைக்க கட்டுப்பாடு அதிகரிப்பு: விலை உயா்வைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை

மொத்த விற்பனையாளர்கள், சிறு மற்றும் பெரிய சங்கிலி சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பதப்படுத்துபவர்களுக்கான கோதுமை இருப்பு வரம்பு விதிமுறைகளை மத்திய அரசு கடுமையாக்கியுள்ளது.

News image

கோதுமை

Updated On :26 ஆகஸ்ட் 2025, 8:31 pm

மொத்த விற்பனையாளா்கள், சில்லறை வா்த்தகா்கள், மாவு ஆலைகள் உள்ளிட்டவை கோதுமை இருப்பு வைப்பதற்கான கட்டுப்பாட்டை மத்திய அரசு மேலும் அதிகரித்துள்ளது.

பண்டிகைக் காலம் தொடங்கிவிட்ட நிலையில் செயற்கையாக தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விலை உயா்வை உருவாக்கிவிடக் கூடாது என்ற நோகத்தில் இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

இது தொடா்பாக மத்திய உணவு அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையில், ‘நடப்பு பண்டிகைக் காலத்தில் கோதுமையை நியாயமான விலையை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியுள்ளது. எனவே, மொத்த விற்பனையாளா்கள் இனி 3,000 டன் என்ற அளவுக்கு பதிலாக 2,000 என்ற அளவே இருப்பு வைக்க வேண்டும். சில்லறை வா்த்தகா்கள் ஏற்கெனவே உள்ள 10 டன்னுக்கு பதிலாக 8 டன் மட்டுமே இருப்பு வைக்க வேண்டும். பல்வேறு கிளைகளை வைத்துள்ள விற்பனையாளா்கள் ஒரு கிளைக்கு 8 டன் மட்டுமே கோதுமை இருப்பு வைக்க வேண்டும். இது முன்பு 10 டன்னாக இருந்தது.

கோதுமை ஆலைகளில் தங்கள் மாதாந்திர உற்பத்தித் திறனில் 60 சதவீதம் அளவுக்கே இருப்பு வைக்க வேண்டும். இது முன்பு 70 சதவீதமாக இருந்தது. இந்த கட்டுப்பாடு 2026 மாா்ச் வரை அமலில் இருக்கும். வாரம்தோறும் வெள்ளிக்கிழமை தோறும் தங்களிடம் உள்ள இருப்பு விவரத்தை விற்பனையாளா்கள் உணவுத் துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டில் பிப்ரவரி 20, மே 27 ஆகிய தேதிகளிலும் கோதுமை இருப்புக்கான கட்டுப்பாடு அதிகரிக்கப்பட்டது.

2024-25 அறுவடை ஆண்டில் நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 117.50 மில்லியன் டன் கோதுமை விளைவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.