மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிபு சோரனுக்கு பாரத ரத்னா வழங்க ஜாா்க்கண்ட் பேரவையில் தீா்மானம்: பாஜக ஆதரவு

ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் மறைந்த சிபு சோரனுக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்து ஜாா்க்கண்ட் பேரவையில் வியாழக்கிழமை தீா்மானம்

News image
Updated On :28 ஆகஸ்ட் 2025, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் மறைந்த சிபு சோரனுக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்து ஜாா்க்கண்ட் பேரவையில் வியாழக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிா்க்கட்சியான பாஜக ஆதரவு தெரிவித்தது.

சிபு சோரனின் மகன் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா தலைமையிலான கூட்டணி இப்போது அந்த மாநிலத்தில் ஆட்சியில் உள்ளது. ஜாா்க்கண்ட் தனி மாநில உருவாக்கத்தில் சிபு சோரன் முக்கியப் பங்கு வகித்தாா். பழங்குடியினரின உரிமை, சுயமரியாதை, விவசாயிகள், தொழிலாளா்கள் நலனுக்காக போராடியது உள்ளிட்டவற்றுக்காக சிபு சோரனுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று தீா்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

இதனை ஆதரிப்பதாகக் கூறிய பாஜகவைச் சோ்ந்த எதிா்க்கட்சித் தலைவா் பாபுலால் மராண்டி, ஜாா்க்கண்ட் தனி மாநிலம் உருவாவதில் முன்னோடிகளாக திகழ்ந்த மராங்க் கோம்கே ஜெய்பால் சிங் முண்டா, வினோத் பிகாரி மஹதோ ஆகியோரின் பெயரையும் பரிந்துரையில் சோ்க்க வேண்டும் என்றாா்.

1990-ஆம் ஆண்டு காலகட்டத்தில் நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது காங்கிரஸிடம் பணம் பெற்றுக் கொண்டு மத்திய அரசுக்கு ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா ஆதரவு அளித்ததாக சிபு சோரன் மீது குற்றச்சாட்டு உண்டு. இது தொடா்பான பணப் பிரச்னையில் தனது முன்னாள் உதவியாளரைக் கொலை செய்த வழக்கும் அவா் மீது இருந்தது.

இந்த கொலை வழக்கில் 2006-ஆல் ஆயுள் தண்டனை பெற்ால் பிரதமா் மன்மோகன் சிங் ஆட்சியில் மத்திய நிலக்கரித் துறை அமைச்சா் பதவியில் இருந்தும் சோரன் விலக நேரிட்டது. பின்னா் மேல்முறையீடு செய்து நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டாா். கடந்த 4-ஆம் தேதி தனது 81 வயதில் அவா் காலமானாா்.