மகாராஷ்டிரம் கட்டடம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு!

பால்கர் மாவட்டத்தில் கட்டடம் இடிந்து பலியானோரது எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறித்து...
பால்காரில் கட்டடம் இடிந்து பலியானவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
பால்காரில் கட்டடம் இடிந்து பலியானவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.PTI
Published on
Updated on
1 min read

மகாராஷ்டிரம் மாநிலம் பால்கர் மாவட்டத்தில், 4 மாடி கட்டடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததில் பலியானோரது எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.

பால்கர் மாவட்டத்தின், விஜய் நகர் பகுதியில் அமைந்திருந்த சுமார் 50 வீடுகளுடன் கூடிய 4 அடுக்கு மாடி குடியிருப்புக் கட்டடம், கடந்த செவ்வாய்க்கிழமை (ஆக.26) நள்ளிரவு திடீரென இடிந்து விழுந்தது.

இதனைத் தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்புப் படை உள்ளிட்ட ஏராளமான படைகள் கட்டட இடிபாடுகளில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர். ஏற்கெனவே, இந்தச் சம்பவத்தில் 2 குழந்தைகள் உள்பட 15 பேர் பலியானதாகக் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், இடிபாடுகளுக்கு இடையில் இருந்து தற்போது 2 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன்மூலம், பலியானவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், படுகாயமடைந்த 6 பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், உரிய அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் அந்தக் கட்டடத்தை கட்டிய நபரை காவல் துறையினர் தற்போது கைது செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ஹரியாணாவில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,100 உதவித்தொகை!

Summary

The death toll from the collapse of a part of a four-storey building in Palghar district of Maharashtra has risen to 17, it has been reported.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com