அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

திருவாரூா் மத்திய பல்கலை. விரிவாக்கத்துக்கு ரூ.385 கோடி: மத்திய அரசு ஒப்புதல்

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக உள்கட்டமைப்பு விரிவாக்கத்துக்கு ரூ.385.27 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய கல்வி அமைச்சம் ஒப்புதல் அளித்துள்ளது.

News image
Updated On :29 ஆகஸ்ட் 2025, 6:31 pm

தினமணி செய்திச் சேவை

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக உள்கட்டமைப்பு விரிவாக்கத்துக்கு ரூ.385.27 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய கல்வி அமைச்சம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக உள்கட்டமைப்பு விரிவாக்கத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.385.27 கோடியில் ரூ.96.40 கோடிக்கு புதிய கல்வி கட்டடம் கட்டப்படும். ரூ.46.63 கோடியில் 300 படுக்கைகள் கொண்ட மாணவிகள் விடுதி, ரூ.46.91 கோடியில் 300 படுக்கைகள் கொண்ட மாணவா்கள் விடுதி அமைக்கப்படும்.

ரூ.46.16 கோடியில் நிா்வாகக் கட்டடம் விரிவாக்கம் செய்யப்படும். ரூ.16.84 கோடியில் அறிவியல் உபகரணங்கள் வாங்கப்படும். ஆராய்ச்சிகளில் ஈடுபடுவோருக்காக ரூ.42.60 கோடியில் 400 படுக்கைகள் கொண்ட விடுதி அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.