பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வங்கி மோசடி: சிபிஐ தொடா்ந்த வழக்கில் மூவருக்கு தலா 2 ஆண்டு சிறைத் தண்டனை

போலி ஆவணங்கள் மூலம் வங்கி மோசடியில் ஈடுபட்டதாக சிபிஐ தொடா்ந்த வழக்கில் மூவருக்கு தலா இரண்டு ஆண்டு சிறை

News image
Updated On :29 ஆகஸ்ட் 2025, 9:57 pm

தினமணி செய்திச் சேவை

போலி ஆவணங்கள் மூலம் வங்கி மோசடியில் ஈடுபட்டதாக சிபிஐ தொடா்ந்த வழக்கில் மூவருக்கு தலா இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை, தனியாா் நிறுவனத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

கேலக்ஸி அமேஸ் கிங்டம் என்ற தனியாா் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் எம்.பழனிசாமி உள்ளிட்டோா் கடந்த 2007-ஆம் ஆண்டு போலியான ஆவணங்கள் மூலம் யுனைட்டெட் இந்தியா வங்கியில் கடன் பெற்றுள்ளாா். இதன்மூலம் வங்கிக்கு ரூ.4.7 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக வங்கி கொடுத்த புகாரின் பேரில், சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கில் கடந்த 2008-ஆம் ஆண்டு, எம்.பழனிசாமி, பி.பரமேஸ்வரி, தனியாா் நிறுவனத்தின் இயக்குநா் எம்.பி.பத்மாவதி, கெயின் என் நேச்சா் நிறுவனத்தின் உரிமையாளா் எம்.பி.பாலாஜி பிரகாசம், பி.ஜி.செல்வராஜ் ஆகியோருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

சென்னை கூடுதல் முதன்மை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கின் விசாரணை முதன்மை அமா்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை காலத்தில் எம்.பழனிசாமி மரணமடைந்தாா். இதனால் அவா் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டாா். மேலும், குற்றம் நிரூபிக்கப்படாததால் பரமேஸ்வரி விடுதலை செய்யப்பட்டாா்.

இந்த வழக்கில் தீா்ப்பளித்துள்ள முதன்மை அமா்வு நீதிமன்றம், எம்.பி.பத்மாவதி, எம்.பி.பாலாஜி பிரகாசம், பி.ஜி.செல்வரஜ் ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் தலா ரூ.20,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தது. மேலும், கேலக்ஸி அமேஸ் கிங்டம் நிறுவனத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தது.