ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்
/

உத்தரகண்டில் மீண்டும் மேக வெடிப்புகள்: 8 பேர் பலி

உத்தரகண்டில் மீண்டும் மேக வெடிப்புகள் ஏற்பட்டதில் 8 பேர் பலியாகினர், மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்.

News image

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணி.

Updated On :29 ஆகஸ்ட் 2025, 9:22 pm IST

உத்தரகண்டில் மீண்டும் மேக வெடிப்புகள் ஏற்பட்டதில் 8 பேர் பலியாகினர், மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்.

உத்தரகண்ட் மாநிலம், ருத்ரபிரயாக், சாமோலி, பாகேஷ்வர் மற்றும் தெஹ்ரி உள்ளிட்ட மாவட்டங்களில் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரை பல்வேறு இடங்களில் மீண்டும் மேக வெடிப்புகள் ஏற்பட்டன.

இந்த சம்பவங்களில் 8 பேர் பலியாகினர், மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்.

இடிபாடுகளுக்கு அடியில் சுமார் 35 கால்நடைகள் புதைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல வீடுகள் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்துள்ளதாகவும், நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள குழுக்கள் விரைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல இடங்களில் சாலைகள் மூடப்பட்டுள்ளதால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளும் ஆங்காங்கே சிக்கித் தவிக்கின்றனர். அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அலக்நந்தா நதியின் நீர்மட்டம் உயர்ந்ததைத் தொடர்ந்து ருத்ரபிரயாக் நகரில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாள்களில் உத்தரகண்டின் சில பகுதிகளில் மேக வெடிப்புகள் ஏற்பட்டன. சமீபத்தில் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தாராலியில் மேக வெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் ஏழு பேர் பலியாகினர்.

Summary

A series of devastating cloudbursts rocked Uttarakhand between Thursday night and Friday morning, claiming at least eight lives and leaving over a dozen people missing across the Garhwal and Kumaon regions.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.