உத்தரகண்டில் மீண்டும் மேக வெடிப்புகள் ஏற்பட்டதில் 8 பேர் பலியாகினர், மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்.
உத்தரகண்ட் மாநிலம், ருத்ரபிரயாக், சாமோலி, பாகேஷ்வர் மற்றும் தெஹ்ரி உள்ளிட்ட மாவட்டங்களில் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரை பல்வேறு இடங்களில் மீண்டும் மேக வெடிப்புகள் ஏற்பட்டன.
இந்த சம்பவங்களில் 8 பேர் பலியாகினர், மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்.
இடிபாடுகளுக்கு அடியில் சுமார் 35 கால்நடைகள் புதைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல வீடுகள் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்துள்ளதாகவும், நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள குழுக்கள் விரைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல இடங்களில் சாலைகள் மூடப்பட்டுள்ளதால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளும் ஆங்காங்கே சிக்கித் தவிக்கின்றனர். அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அலக்நந்தா நதியின் நீர்மட்டம் உயர்ந்ததைத் தொடர்ந்து ருத்ரபிரயாக் நகரில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாள்களில் உத்தரகண்டின் சில பகுதிகளில் மேக வெடிப்புகள் ஏற்பட்டன. சமீபத்தில் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தாராலியில் மேக வெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் ஏழு பேர் பலியாகினர்.
Summary
A series of devastating cloudbursts rocked Uttarakhand between Thursday night and Friday morning, claiming at least eight lives and leaving over a dozen people missing across the Garhwal and Kumaon regions.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் தேர்வு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த காவலர் ராஜிநாமா!

ஹிமாசலில் வாகனத்தின் மீது ராட்சதப் பாறை விழுந்ததில் 13 பேர் பலி!

சீனாவில் கடும் வெள்ளம்: 39 பேர் பலி; 1,30,000 பேர் வெளியேற்றம்!

மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



