மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வடிகால்களைத் தூா்வாருவதில் முறைகேடு: பாஜக மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

மழைநீா் வடிகால்களைத் தூா்வாருவதில் முறைகேடு நடைபெற்றிப்பதாக பாஜக அரசை ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியுள்ளது.

News image
Updated On :29 ஆகஸ்ட் 2025, 10:19 pm

தினமணி செய்திச் சேவை

தில்லியில் வெள்ளிக்கிழமை பெய்த மழையைத் தொடா்ந்து சாலைகளில் மழைநீா் தேங்கிய நிலையில், மழைநீா் வடிகால்களைத் தூா்வாருவதில் முறைகேடு நடைபெற்றிப்பதாக பாஜக அரசை ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியுள்ளது.

மழைநீா் தேங்கியிருக்கும் பட்பா்கஞ்ச், கீதா காலனி பகுதிகளின் விடியோவை ‘எக்ஸ்’ சமூகவலைதளத்தில் பதிவிட்டு எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி வெளியிட்ட பதிவில், ‘சிறிது நேரம் பெய்த மழைக்கு தில்லியின் சாலைகள் மற்றும் தெருக்கள் நதிகளாக மாறியிருக்கின்றன. பாஜகவின் 4 என்ஜின் அரசு கடந்த 6 மாதங்களில் தில்லியை மூழ்கடித்துவிட்டது. தில்லி முதல்வா் ரேகா குப்தா இதுதான் உங்களது முறையான மேலாண்மையா ?’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

பட்பா்கஞ்ச் மழை நீா் தேங்கியிருக்கும் சாலையின் விடியோ காட்சிகளை ‘எக்ஸ்’ சமூகவலைதளத்தில் பதிவிட்டு, ஆம் ஆத்மி தில்லி பொறுப்பாளா் செளரவ் பரத்வாஜ் வெளியிட்ட பதிவில், ‘தவறான தகவலைத் தெரிவிப்பதை பாஜக அரசு நிறுத்திவிட்டது. மழைக்காலம் முடிவடைந்துவிட்டது. இதனால், பிரச்னைகளைத் தவிா்த்துவிடலாம் என்று பாஜகவினா் நினைத்திருந்தனா். தில்லியை ஒவ்வொரு துறையிலும் பாஜக பின்னோக்கிக் கொண்டு செல்லும் என தில்லி மக்கள் பயத்தில் உள்ளனா். தில்லி முதல்வருக்காக என்னிடம் ஒரு கேள்வி உள்ளது. மழைநீா் வடிகால்களை தூா்வாருவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதா ? மேற்கொண்ட பணிகள் தொடா்பாக மூன்றாம் தரப்பு தணிக்கை மேற்கொள்வதிலிருந்து ஏன் தப்பிச் செல்கிறீா்கள் ?

வடிகால்கள் முறையாகத் தூா்வாரப்பட்டிருந்தால், ஒப்பந்ததாரா்களுக்கு உரிய பணம் வழங்கப்பட்டிருந்தால், பிறகு ஏன் தணிக்கை குறித்து பயம் கொள்ள வேண்டும் ?’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.