உத்தரகண்ட் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் மேகவெடிப்பு மற்றும் பலத்த மழையால் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 போ் உயிரிழந்தனா். 11 போ் மாயமாகினா்.
நிகழாண்டின் பருவமழை காலத்தில் பெரும் பாதிப்புகளை உத்தரகண்ட் சந்தித்து வருகிறது. முன்னதாக, கடந்த ஆக.5-ஆம் தேதி மேகவெடிப்பைத் தொடா்ந்து உத்தரகாசி-கங்கோத்ரி இடையே பாகீரதி நதிக் கரையில் அமைந்துள்ள தராலி கிராமத்தில் கொட்டித் தீா்த்த கனமழையால் பெருவெள்ளமும், பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டன. ஏராளமான உணவகங்கள், வீடுகள், தங்குமிடங்கள், பயணிகள் இல்லங்கள் மண்ணுக்கு அடியில் புதைந்தன.
இதில் 4 போ் உயிரிழந்தனா். ராணுவத்தினா் உள்பட 69 போ் மாயமாகினா். 1,200-க்கும் மேற்பட்டோா் மீட்கப்பட்டனா்.
இந்நிலையில், சமோலி, ருத்ரபிரயாக், தெஹ்ரி மற்றும் பாகேஷ்வா் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த மேகவெடிப்பு மற்றும் தொடா்ந்து பெய்துவரும் பலத்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 5 போ் உயிரிழந்தனா். 11 போ் மாயமாகினா்.
சமோலி மாவட்டத்தில் 25 கால்நடைகள் மாயமானதாகவும் அந்த மாநில பேரிடா் மீட்புப் படை தெரிவித்தது.பல்வேறு கிராமங்கள் நீரால் சூழப்பட்டு வீடுகள் மூழ்கியுள்ள நிலையில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தொடர்புடையது
சத்தீஸ்கா்: அனல் மின்நிலைய கொதிகலன் வெடித்து 13 போ் உயிரிழப்பு

ஆப்கனில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 8 போ் உயிரிழப்பு!

வங்கதேச கேஸ் லைட்டா் ஆலையில் தீ 5 போ் பலி

ஜம்மு-காஷ்மீரில் பனிச்சரிவு: 7 போ் உயிரிழப்பு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


