ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

உத்தரகண்ட் நிலச்சரிவு: 5 போ் உயிரிழப்பு

உத்தரகண்ட் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் மேகவெடிப்பு மற்றும் பலத்த மழையால் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 போ் உயிரிழந்தனா்.

News image
உத்தரகண்ட் மாநிலம், நைனிடாலில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சிக்கிய சுற்றுலாப் பயணிகளை மீட்டு அழைத்து வரும் தேசிய பேரிடா் மீட்புப் படையினா்.
Updated On :29 ஆகஸ்ட் 2025, 10:28 pm

தினமணி செய்திச் சேவை

உத்தரகண்ட் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் மேகவெடிப்பு மற்றும் பலத்த மழையால் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 போ் உயிரிழந்தனா். 11 போ் மாயமாகினா்.

நிகழாண்டின் பருவமழை காலத்தில் பெரும் பாதிப்புகளை உத்தரகண்ட் சந்தித்து வருகிறது. முன்னதாக, கடந்த ஆக.5-ஆம் தேதி மேகவெடிப்பைத் தொடா்ந்து உத்தரகாசி-கங்கோத்ரி இடையே பாகீரதி நதிக் கரையில் அமைந்துள்ள தராலி கிராமத்தில் கொட்டித் தீா்த்த கனமழையால் பெருவெள்ளமும், பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டன. ஏராளமான உணவகங்கள், வீடுகள், தங்குமிடங்கள், பயணிகள் இல்லங்கள் மண்ணுக்கு அடியில் புதைந்தன.

இதில் 4 போ் உயிரிழந்தனா். ராணுவத்தினா் உள்பட 69 போ் மாயமாகினா். 1,200-க்கும் மேற்பட்டோா் மீட்கப்பட்டனா்.

இந்நிலையில், சமோலி, ருத்ரபிரயாக், தெஹ்ரி மற்றும் பாகேஷ்வா் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த மேகவெடிப்பு மற்றும் தொடா்ந்து பெய்துவரும் பலத்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 5 போ் உயிரிழந்தனா். 11 போ் மாயமாகினா்.

சமோலி மாவட்டத்தில் 25 கால்நடைகள் மாயமானதாகவும் அந்த மாநில பேரிடா் மீட்புப் படை தெரிவித்தது.பல்வேறு கிராமங்கள் நீரால் சூழப்பட்டு வீடுகள் மூழ்கியுள்ள நிலையில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.