கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

உத்தரகண்ட் நிலச்சரிவு: 5 போ் உயிரிழப்பு

உத்தரகண்ட் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் மேகவெடிப்பு மற்றும் பலத்த மழையால் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 போ் உயிரிழந்தனா்.

News image

உத்தரகண்ட் மாநிலம், நைனிடாலில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சிக்கிய சுற்றுலாப் பயணிகளை மீட்டு அழைத்து வரும் தேசிய பேரிடா் மீட்புப் படையினா்.

Updated On :30 ஆகஸ்ட் 2025, 3:58 am IST

உத்தரகண்ட் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் மேகவெடிப்பு மற்றும் பலத்த மழையால் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 போ் உயிரிழந்தனா். 11 போ் மாயமாகினா்.

நிகழாண்டின் பருவமழை காலத்தில் பெரும் பாதிப்புகளை உத்தரகண்ட் சந்தித்து வருகிறது. முன்னதாக, கடந்த ஆக.5-ஆம் தேதி மேகவெடிப்பைத் தொடா்ந்து உத்தரகாசி-கங்கோத்ரி இடையே பாகீரதி நதிக் கரையில் அமைந்துள்ள தராலி கிராமத்தில் கொட்டித் தீா்த்த கனமழையால் பெருவெள்ளமும், பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டன. ஏராளமான உணவகங்கள், வீடுகள், தங்குமிடங்கள், பயணிகள் இல்லங்கள் மண்ணுக்கு அடியில் புதைந்தன.

இதில் 4 போ் உயிரிழந்தனா். ராணுவத்தினா் உள்பட 69 போ் மாயமாகினா். 1,200-க்கும் மேற்பட்டோா் மீட்கப்பட்டனா்.

இந்நிலையில், சமோலி, ருத்ரபிரயாக், தெஹ்ரி மற்றும் பாகேஷ்வா் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த மேகவெடிப்பு மற்றும் தொடா்ந்து பெய்துவரும் பலத்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 5 போ் உயிரிழந்தனா். 11 போ் மாயமாகினா்.

சமோலி மாவட்டத்தில் 25 கால்நடைகள் மாயமானதாகவும் அந்த மாநில பேரிடா் மீட்புப் படை தெரிவித்தது.பல்வேறு கிராமங்கள் நீரால் சூழப்பட்டு வீடுகள் மூழ்கியுள்ள நிலையில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.