திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய் மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம் நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா! தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3) கபினியில் நீர்த் திறப்பு 27,000 கன அடியாக உயர்வு
/

சத்தீஸ்கரில் ஆசிரியரைக் கடத்தி கொன்ற நக்சல்கள்!

சத்தீஸ்கரில் ஆசிரியர் ஒருவர் கடத்தி கொலை செய்யப்பட்டது குறித்து...

News image

கோப்புப் படம்

Updated On :30 ஆகஸ்ட் 2025, 6:05 pm IST

சத்தீஸ்கரில், அரசுப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றிய இளைஞர் ஒருவர் நக்சல்களால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

பிஜப்பூர் மாவட்டத்தில், டோட்கா கிராமத்தைச் சேர்ந்த கல்லு டட்டி (வயது 25) எனும் இளைஞர், லெந்திரா கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று (ஆக.29) மாலை, பணி முடிந்து தனது வீட்டுக்குச் சென்றபோது அவரை நக்சல்கள் கடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, கடத்தப்பட்ட கல்லு டட்டியை, நக்சல்கள் கூர்மையான ஆயுதங்களினால் தாக்கி கொலை செய்து, அவரது சடலத்தை கிராமத்தின் அருகில் வீசி சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தகவலறிந்து இன்று (ஆக.30) அங்கு விரைந்த பாதுகாப்புப் படையினர் அவரது உடலைக் கைப்பற்றி, கூராய்வு சோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து, விசாரணை நடைபெற்று வரும் சூழலில், காவல் துறைக்கு தகவல் அளிக்கும் உளவாளி எனும் சந்தேகத்தில் நக்சல்கள் அவரைக் கொன்றதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, பஸ்தார் பகுதியில் சிக்‌ஷாடூட்ஸ் எனப்படும் தற்காலிக ஆசிரியர்களை நக்சல்கள் தொடர்ந்து குறிவைத்து வருகின்றனர். கடந்த 2023 ஜூன் மாதம் முதல், 8 தற்காலிக ஆசிரியர்கள் நக்சல்களால் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

In Chhattisgarh, a young man working as a temporary teacher in a government school was reportedly abducted and murdered by Naxals.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.