மணிப்பூரில் மலர் விழாவை செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூரின் சேனாபதி மாவட்டத்தில் மலர் விழாவை நாகாலாந்தை தளமாகக் கொண்ட தொலைக்காட்சி சேனலில் பணிபுரியும் பத்திரிகையாளர் சனிக்கிழமை செய்தி சேகரிக்க சென்றிருக்கிறார். அப்போது பத்திரிகையாளர் டிப் சைகியா மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதில் அவரது வலது காலில் காயமடைந்தார். உடனே அவர் முதலுதவிக்காக சேனாபதி மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகாலாந்துக்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் ஆபத்தில் இருந்து மீண்டுவிட்டதாக மருத்துவமனை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
இதுகுறித்து மணிப்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மூத்த போலீஸ் அதிகாரி கூறுகையில், தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஏர் ரைபிள் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டது. மர்ம நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவரை கைது செய்ய குழு விரைந்துள்ளது.
இருப்பினும், தாக்குதலுக்குப் பின்னால் உள்ள நோக்கம் தெளிவாகத் தெரியவில்லை என்றார். இதனிடையே பத்திரிகையாளர் மீதான தாக்குதலுக்கு தெலைக்காட்சி சேனல் கண்டனம் தெரிவித்துள்ளது.
Summary
The incident took place on Saturday evening during the 'Zinnia Flower Festival' or 'Cherry Blossom Festival' at Laii village. The journalist, identified as Dip Saikia, sustained bullet injuries when armed miscreants opened fire around 4 pm.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மணிப்பூரில் துப்பாக்கிச்சூடு: 3 இளைஞர்கள் காயம்
மணிப்பூரில் இருந்து 132 என்சிசி மாணவர்களை மீட்ட இந்திய விமானப் படை!

குகி, நாகா சமூகங்களைச் சேர்ந்த 38 பேர் சிறைப்பிடிப்பு! - மணிப்பூர் அரசு அறிவிப்பு!

மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



