

நாடாளுமன்ற மரபுகளை காக்கும் வகையில் உறுப்பினர்கள் செயல்பட வேண்டும் என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வலியுறுத்தியிருக்கிறார்.
நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் வரும் இன்று தொடங்கி 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கூட்டத்தொடரில் 15 அமா்வுகள் இடம்பெற உள்ளன. இந்த நிலையில், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஓம் பிர்லா தன்னுடைய எக்ஸ் பதிவில், 18வது மக்களவையின் ஆறாவது (குளிர்கால கூட்டத்தொடர்) கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது.
நாடாளுமன்றம் என்பது நாட்டின் அதிகபட்ச எதிர்பார்ப்புகள், பொது நலன்கள், ஜனநாயக மதிப்புகள் மற்றும் அதன் பிரதிநிதிகளின் கூட்டுப் பொறுப்பை வெளிப்படுத்துவதற்கான மிக உயர்ந்த தளமாக அமைந்துள்ளது.
ஒவ்வொரு அமர்வும் கடமை, கண்ணியம் மற்றும் பொது நலனை நோக்கி நம்மை வழிநடத்துகிறது, ஜனநாயக பிரதிநிதித்துவ உணர்வை மேலும் வலுப்படுத்துகிறது.
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் நமது ஜனநாயகத்தின் ஆரோக்கியமான மரபுகளை நிலைநிறுத்துவார்கள் என்றும், அவர்களின் முழுமையான பங்களிப்பின் மூலம் இந்த அமர்வை உருவாக்கம் மற்றும் அர்த்தமுள்ள அமர்வுகளாக மாற்றுவார்கள் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.