அமெரிக்காவில் இருந்து 2009 ஆம் ஆண்டு முதல் 18,822 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டு தாயகத்துக்கு நாடுகடத்தப்பட்டதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய புலனாய்வு ஆணையம் மேற்கொண்ட ஆள்கடத்தல் விசாரணையில், இந்தக் குற்றத்தில் பஞ்சாப் மாநிலம் முதலிடத்தில் உள்ளதாகக் கூறியுள்ளார்.
இத்துடன், 27 ஆள்கடத்தல் வழக்குகளில் 169 பேரைக் கைது செய்து 132 பேருக்கு எதிராக தேசிய புலனாய்வு ஆணையம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்தியர்கள் குறித்து அமைச்சர் ஜெய்சங்கர் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாகக் கூறியதாவது:
“2009 ஆம் ஆண்டு முதல் 18,822 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டு இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர். 2023 ஆம் ஆண்டில் 617 இந்தியர்களும், 2024 ஆம் ஆண்டில் 1,368 இந்தியர்களும் வெளியேற்றப்பட்டனர்.
ஆனால், 2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் இதுவரை 3,258 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டு இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களில் 2,036 பேர் போக்குவரத்து விமானங்களிலும், 1,226 பேர் சிறப்பு விமானங்களிலும் நாடுகடத்தப்பட்டுள்ளனர்” என்று கூறியுள்ளார்.
இதையும் படிக்க: ரஷிய அதிபர் புதினை சந்திக்க ராகுல் காந்திக்கு அனுமதி மறுப்பு!
Summary
The central government has said that 18,822 Indians have been deported from the United States since 2009.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இந்தியர்கள் ஈரானை விட்டு வெளியேறுங்கள்: இந்தியத் தூதரகம் எச்சரிக்கை!

வியத்நாம் படகு விபத்து: உயிர்பிழைத்த 16 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர்
வியத்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! தமிழர்கள் உள்பட 15 இந்தியர்கள் பலி!

உக்ரைனின் தாக்குதல்களில் 8,500 ரஷியர்கள் பலி! வெளியானது அதிர்ச்சி தகவல்!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



