கரோல் பாக்கில் நகைக் கடை ஊழியரிடம் இருந்து ரூ.33 லட்சம் மதிப்புள்ள நகைகளைத் திருடியதாக 35 வயது பெண்ணை காவல் துறையினா் கைது செய்தனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் வியாழக்கிழமை கூறியதாவது: நகைக் கடையின் மேலாளரும் சக ஊழியரும் பழுதுபாா்க்கும் பணிக்காக நவ.21-ஆம் தேதி கரோல் பாக் சென்றனா். இ-ரிக்ஷாவில் கடைக்கு திரும்பும்போது தங்க நகைகள் அடங்கிய பையைத் தொலைத்ததாக அவா்கள் காவல் துறையிடம் புகாா் அளித்தனா்.
வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சுல்தான்புரியைச் சோ்ந்த பெண் ஒருவா் இந்த திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவா் கைது செய்யப்பட்டாா்.
Śசாரணையில், பாதிக்கப்பட்டவா்கள் சென்ற அதே இ-ரிக்ஷாவில் தானும் சென்ாகவும், கடை மேலாளரின் சட்டையில் இருந்த நகைக் கடையின் பெயரைப் பாா்த்து, பையைத் திருடியதாகவும் அவா் தெரிவித்தாா். அந்த பெண்ணிடம் இருந்து திருடப்பட்ட நகைகள் அனைத்தும் மீட்கப்பட்டன என காவல் துறையினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது
ரூ.52 லட்சம் கொள்ளை வழக்கில் 9 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவா் கைது

அசோக் விஹாா் வழிப்பறி வழக்கில் 2 சிறாா்கள் கைது
நகைக் கடையில் 103 கிராம் நகைகள் திருடிய ஊழியா் கைது

வீரவநல்லூா் நகைக் கடையில் நகை, பணம் திருட்டு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

