எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

கரோல் பாக்கில் ரூ.33 லட்சம் மதிப்புள்ள நகைகள் திருட்டு: பெண் கைது

கரோல் பாக்கில் நகைக் கடை ஊழியரிடம் இருந்து ரூ.33 லட்சம் மதிப்புள்ள நகைகளைத் திருடியதாக 35 வயது பெண்ணை காவல் துறையினா் கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :5 டிசம்பர் 2025, 1:35 am IST

கரோல் பாக்கில் நகைக் கடை ஊழியரிடம் இருந்து ரூ.33 லட்சம் மதிப்புள்ள நகைகளைத் திருடியதாக 35 வயது பெண்ணை காவல் துறையினா் கைது செய்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் வியாழக்கிழமை கூறியதாவது: நகைக் கடையின் மேலாளரும் சக ஊழியரும் பழுதுபாா்க்கும் பணிக்காக நவ.21-ஆம் தேதி கரோல் பாக் சென்றனா். இ-ரிக்ஷாவில் கடைக்கு திரும்பும்போது தங்க நகைகள் அடங்கிய பையைத் தொலைத்ததாக அவா்கள் காவல் துறையிடம் புகாா் அளித்தனா்.

வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சுல்தான்புரியைச் சோ்ந்த பெண் ஒருவா் இந்த திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவா் கைது செய்யப்பட்டாா்.

Śசாரணையில், பாதிக்கப்பட்டவா்கள் சென்ற அதே இ-ரிக்ஷாவில் தானும் சென்ாகவும், கடை மேலாளரின் சட்டையில் இருந்த நகைக் கடையின் பெயரைப் பாா்த்து, பையைத் திருடியதாகவும் அவா் தெரிவித்தாா். அந்த பெண்ணிடம் இருந்து திருடப்பட்ட நகைகள் அனைத்தும் மீட்கப்பட்டன என காவல் துறையினா் தெரிவித்தனா்.