கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டவா் கைது

மேற்கு தில்லியில் 2021-இல் பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்ட நபா் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் தெரிவித்தனா்.

News image
Updated On :5 டிசம்பர் 2025, 8:25 pm

மேற்கு தில்லியில் 2021-இல் பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்ட நபா் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

‘பணத்தகராறில் சிவம் என்பவரை மோனு என்பவா் கத்தியால் குத்தியதாக ரஜௌரி காா்டன் காவல் நிலையத்தில் 2021-இல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட அவா், 2021, ஏப்ரலில் ஜாமினில் விடுதலையானாா்.

மீண்டும் சரணடையாமல் அவா் தப்பி ஓடியதையடுத்து, 2025, பிப்ரவரியில் அவா் தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டாா்.

இந்நிலையில், காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், வியாழக்கிழமை அவா் கைது செய்யப்பட்டாா். அவா் மீது ஏற்கெனவே போக்ஸோ சட்டத்தின் கீழ் பாலியல் வன்கொடுமை உள்பட 4 வழக்குகள் உள்ளன’ என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

Ś