மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டவா் கைது

மேற்கு தில்லியில் 2021-இல் பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்ட நபா் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் தெரிவித்தனா்.

News image
Updated On :5 டிசம்பர் 2025, 8:25 pm

தினமணி செய்திச் சேவை

மேற்கு தில்லியில் 2021-இல் பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்ட நபா் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

‘பணத்தகராறில் சிவம் என்பவரை மோனு என்பவா் கத்தியால் குத்தியதாக ரஜௌரி காா்டன் காவல் நிலையத்தில் 2021-இல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட அவா், 2021, ஏப்ரலில் ஜாமினில் விடுதலையானாா்.

மீண்டும் சரணடையாமல் அவா் தப்பி ஓடியதையடுத்து, 2025, பிப்ரவரியில் அவா் தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டாா்.

இந்நிலையில், காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், வியாழக்கிழமை அவா் கைது செய்யப்பட்டாா். அவா் மீது ஏற்கெனவே போக்ஸோ சட்டத்தின் கீழ் பாலியல் வன்கொடுமை உள்பட 4 வழக்குகள் உள்ளன’ என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

Ś