ஜம்மு-காஷ்மீரில் பள்ளத்தில் கார் விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள சர்தல் மாதா கோயிலில் வழிபாடு செய்துவிட்டு குடும்பத்தினர் காரில் சனிக்கிழமை தங்கள் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது கிஷ்த்வார் நகரத்திலிருந்து சுமார் 25 கிமீ தொலைவில் உள்ள டிராப்ஷல்லா இணைப்புச் சாலையின் வளைவில் கட்டுப்பாட்டை இழந்து கார் பள்ளத்தில் விழுந்தது.
உடனே உள்ளூர்வாசிகள் காரில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இறங்கினர். இந்த விபத்தில் பெண் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும் பெண் ஒருவர் மீட்கப்பட்டு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
விபத்து குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Summary
Prima facie, the driver of the car lost control while negotiating a blind curve, causing the vehicle to veer off the road and fall into the gorge, police said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கிளிஞ்சல்கள் சேகரிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் கடலில் மூழ்கி பலி!

கர்நாடகம்: கனமழைக்கு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

ஜார்க்கண்டில் மின்னல் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

சிக்கன் புலாவ், தர்பூசணி சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



