6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஹரியாணாவில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் சூரிய ஒளி மின் அமைப்பு: முதல்வர் நாயப் சிங் சைனி

ஹரியாணாவில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் சூரிய ஆற்றல் மின்சார அமைப்புகளை நிறுவ முதல்வர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் பற்றி...

News image
கோப்பிலிருந்து படம்- Center-Center-Chennai
Updated On :6 டிசம்பர் 2025, 1:12 pm

இணையதளச் செய்திப் பிரிவு

ஹரியாணாவில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் சூரிய ஒளி மின் அமைப்புகளை நிறுவ வேண்டுமென அம்மாநில முதல்வர் நாயப் சிங் சைனி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். பசுமை ஆற்றலை முன்னிலைப்படுத்துதல் நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஹரியாணாவில் மின் துறை மீதான நிதி நிலை அறிக்கை குறித்து முதல்வர் நாயப் சிங் சைனி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நையாப் சிங் சைனி பேசும்போது, பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், அலுவலகங்கள் உள்பட அனைத்து அரசு வளாகங்களிலும் மேல்நிலை சூரிய ஆற்றல் மின் அமைப்புகளை நிறுவ அதிகாரிகளுக்கு அறுவுறுத்தினார். மாநிலத்தில் வீடுகளில் சூரிய ஆற்றல் மின் அமைப்புகளை நிறுவுவதை அதிகாரிகள் விரிவுபடுத்திடவும் அறிவுறுத்தினார்.

மேலும், சூரிய ஆற்றல் பூங்காக்களை ஹரியாணாவில் அமைப்பது தொடர்பாகவும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பொது இடங்களில், அதிலும் குறிப்பாக மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் மக்களின் பாதுகாப்பு கருதி, பழைய மற்றும் மோசமான நிலையில் இருக்கும் மின் கம்பங்களை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் அவர் அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் பேசிய ஹரியாணா மின்சார உற்பத்தி கழகத்தின் தலைவர் ஷியாமல் மிஸ்ரா, 2027-ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் ஹரியாணாவில் 2 லட்சத்து 22 ஆயிரம் சூரிய ஆற்றல் மின் அமைப்புகளை நிறுவிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

summary

Haryana Chief Minister Nayab Singh Saini on Saturday directed that all government buildings like schools, colleges, hospitals, offices, etc, be equipped with rooftop solar systems to accelerate the state's transition towards clean and green energy.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.