உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

இந்தியாவுக்கு சேவையாற்ற ஆவல்: எலான் மஸ்க்

ஸ்டார்லிங்க் இணைய சேவை மூலம் இந்தியாவுக்கு சேவையாற்ற விரும்புவதாக எலான் மஸ்க் பதிவு

எலான் மஸ்க் - கோப்புப் படம்

Published On :

ஸ்டார்லிங்க் இணைய சேவை மூலம் இந்தியாவுக்கு சேவையாற்ற விரும்புவதாக எலான் மஸ்க் கூறியுள்ளார்.

இந்தியாவில் ஸ்டார்லிங்க் இணையச் சேவையைக் கொண்டு வருவதில் அதன் நிறுவனர் எலான் மஸ்க் தீவிரமாக உள்ள நிலையில், விரைவில் ஸ்டார்லிங்க் சேவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை குறித்து அந்நிறுவன அதிகாரியை சந்தித்ததில் மகிழ்ச்சி என்று வடகிழக்கு பிராந்தியத்தின் தகவல் தொடர்பு மற்றும் மேம்பாட்டுக்கான மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா பதிவிட்டார்.

இந்த நிலையில், ஜோதிராதித்யாவின் எக்ஸ் பதிவை பகிர்ந்த எலான் மஸ்க், `ஸ்டார்லிங்க் மூலம் இந்தியாவுக்கு சேவையாற்றுவதற்கு ஆவலாக இருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவைக்கான மாதாந்திரக் கட்டணமாக ரூ. 8,600 மற்றும் ஒருமுறை நிறுவுதல் கட்டணமாக ரூ. 34,000 என்று இணையங்களில் தகவல் வெளியான நிலையில், அதனை ஸ்டார்லிங்க் நிறுவனம் மறுத்தது. மேலும், கட்டண விவரங்கள் இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை என்றும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.

Summary

Elon Musk Looking forward to serving India with Starlink

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.