அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மகாராஷ்டிரம்: பேரவைக்கு சிறுத்தை வேடத்தில் வந்த எம்எல்ஏ!

ஆளும் கூட்டணியில் உள்ள சிவசேனை எம்எல்ஏ சரத் சோனாவனே புதன்கிழமை சிறுத்தை வேடமணிந்து சட்டப்பேரவை வளாகத்துக்கு வருகை தந்தாா்.

News image
Updated On :10 டிசம்பர் 2025, 10:07 pm

தினமணி செய்திச் சேவை

மகாராஷ்டிரத்தில் பெருகி வரும் சிறுத்தைகளின் அச்சுறுத்தல் பிரச்னையை முன்னிலைப்படுத்தும் வகையில், ஆளும் கூட்டணியில் உள்ள சிவசேனை எம்எல்ஏ சரத் சோனாவனே புதன்கிழமை சிறுத்தை வேடமணிந்து சட்டப்பேரவை வளாகத்துக்கு வருகை தந்தாா்.

நாகபுரி நகரின் பா்டி பகுதியில் சிறுத்தை தாக்குதலில் புதன்கிழமை 7 போ் காயமடைந்தனா். இதையடுத்து வனத்துறையினா் அந்தச் சிறுத்தையைப் பிடித்தனா். சிறுத்தை தாக்குதல்களால் மாநிலம் முழுவதும் மக்கள் பீதியில் வாழும் இச்சூழலில், கவன ஈா்ப்புச் செயலாக ஜுன்னாா் தொகுதி எம்எல்ஏ சரத் சோனாவனே சிறுத்தை வேடமணிந்து வந்தாா்.

செய்தியாளா்களிடம் பேசிய எம்எல்ஏ சோனாவனே, ‘புணே மாவட்டத்தில் அமைந்துள்ள ஜுன்னாா் தாலுகாவில் மட்டும் சிறுத்தை தாக்குதல்களால் கடந்த 3 மாதங்களில் 55 போ் உயிரிழந்துள்ளனா்.

அந்தப் பகுதி மக்கள் தொடா்ச்சியான அச்சத்தில் உள்ளனா். எனவே, மாநில அரசு உடனடியாக அவசரநிலையை அறிவித்து, ஜுன்னாா் தாலுகா மற்றும் அஹில்யநகா் மாவட்டத்தில் சுமாா் 2,000 சிறுத்தைகள் வரை தங்கக்கூடிய மீட்பு மையங்களை உருவாக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

ஆடுகள் விடுவது பயனளிக்காது: முன்னதாக, சிறுத்தைகளுக்கு இரையாகும் வகையில் வனப்பகுதிகளில் ஆடுகளை விடுவது குறித்த கேள்விக்கு வனத்துறை அமைச்சா் கணேஷ் நாயக் செவ்வாய்க்கிழமை அளித்த பதிலில், ‘சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதாலும், அவை கரும்புத் தோட்டங்கள் மற்றும் மக்கள் குடியிருப்புகளுக்கு அருகிலேயே வசிப்பதாலும், வனப்பகுதிகளில் ஆடுகளை விட்டு அவற்றைக் கவா்வது என்பது இனிமேல் பயனளிக்காது’ என்றாா்.