மத்திய அரசின் தலைமை தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்களைத் தேர்வு செய்வது தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷாவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்தித்துப் பேசியுள்ளார்.
நாட்டில் தலைமை தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்களைத் தேர்வு செய்யும் குழுவில் பிரதமர் மோடி, அமித் ஷா, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் புதிய தலைமை தகவல் ஆணையரைத் தேர்வு செய்யும்பொருட்டும் காலியாக உள்ள 8 தகவல் ஆணையர்களின் இடங்களை நிரப்பும் பொருட்டும் இந்த குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது.
மேலும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் தலைவரைத் தேர்வு செய்வது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் அறையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, அமித் ஷாவுடன் ராகுல் காந்தியும் கலந்துகொண்டுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு சிலரது பெயர்களை பரிந்துரை செய்ததாகவும் அதற்கு ராகுல் காந்தி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகவும் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த கூட்டம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 12 (3) இன் கீழ் தலைமை தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்கள் பிரதமர் தலைமையிலான இந்த குழுவால் நியமனம் செய்யப்படுகின்றனர். தற்போது 10 தகவல் ஆணையர்களில் இருவர் மட்டுமே உள்ளதும் மற்ற 8 இடங்கள் காலியாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தகவல் அறியும் உரிமை தொடர்பான புகார்கள் இவர்களால் கண்காணிக்கப்படுகின்றன. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 30,838 புகார்கள் இன்னும் நிலுவையில் உள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
Summary
Rahul Gandhi meets PM Modi and Home Minister Amit Shah in PM chamber
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாணவர்கள் மீது தடியடி! அமித்ஷாவுக்கு தொலைபேசியில் வந்த லைவ் அப்டேட்! - ராகுல் குற்றச்சாட்டு

மாணவர்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்! - ராகுல் காந்தி வலியுறுத்தல்!

தில்லியில் பிரதமர் இல்லம் முன் போராட்டம் நடத்திய ராகுல் காந்தி கைது - புகைப்படங்கள்

சிஜேபிக்கு ஆதரவு! பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி தர்னா!
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி


