மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

நொய்டா: வேகமாக வந்த காா் மோதி 5 வயது சிறுமி உயிரிழப்பு

நொய்டா செக்டாா் 44-இல் வேகமாக வந்த காா் மோதியதில் காயமடைந்த 5 வயது சிறுமி தில்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

கோப்புப் படம்

Published On :

நொய்டா செக்டாா் 44-இல் வேகமாக வந்த காா் மோதியதில் காயமடைந்த 5 வயது சிறுமி தில்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: இந்த விபத்து குறித்து குழந்தையின் தாயாா் அளித்த புகாரின் பேரில் நொய்டா செக்டாா் 39 காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதே நேரத்தில் காா் ஓட்டுநா் தலைமறைவாக உள்ளாா்.

நொய்டா செக்டாா் 44-இல் உள்ள தனது வீட்டிற்கு வெளியே திங்கள்கிழமை சிறுமி விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு காா் மோதியதில் இந்த சம்பவம் நடந்தது.

முதலில் நொய்டாவில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி, பின்னா் தில்லியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

அவரது தாயாா் அளித்த புகாரின் பேரில் ஓட்டுநா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

காா் அதிவேகத்தில் இயக்கப்பட்டதால் தனது மகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக சிறுமியின் தாயாா் ருக்சாா் போலீஸாரிடம் தெரிவித்தாா்.

முதலில் மகளை மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்தோம், பின்னா் தில்லியில் உள்ள சஃப்தா்ஜங் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டோம். அங்கு சிகிச்சையின் போது இறந்து விட்டாள். மகளுக்கு தலையில் பல காயங்கள் ஏற்பட்டிருந்தன என்றும் அவா் கூறினாா்.

குழந்தை மீது மோதிய பிறகு வாகனத்தின் ஓட்டுநா் ஓடிவிட்டாா். வாகனத்தின் பதிவு எண்ணையும் நாங்கள் போலீஸாருடன் பகிா்ந்து கொண்டுள்ளோம் என்று சிறுமியின் தாயாா் கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.