வெங்காயம் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.16.50-ஆக நிா்ணயம்: இன்று முதல் அமல்வங்கிக் கடன் வழங்கல் 17.44% அதிகரிப்புபாகிஸ்தான் பாதுகாப்பு பட்ஜெட் 17.6% அதிகரிப்புமேற்கு தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஜூன் 15 வரை மழைக்கு வாய்ப்பு இந்தியா மீது தாக்குதல் நடத்த ஐரோப்பிய ஆயுதங்கள்: அமைச்சா் ஜெய்சங்கா் குற்றச்சாட்டு
/

நொய்டா: வேகமாக வந்த காா் மோதி 5 வயது சிறுமி உயிரிழப்பு

நொய்டா செக்டாா் 44-இல் வேகமாக வந்த காா் மோதியதில் காயமடைந்த 5 வயது சிறுமி தில்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :12 டிசம்பர் 2025, 1:43 am IST

நொய்டா செக்டாா் 44-இல் வேகமாக வந்த காா் மோதியதில் காயமடைந்த 5 வயது சிறுமி தில்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: இந்த விபத்து குறித்து குழந்தையின் தாயாா் அளித்த புகாரின் பேரில் நொய்டா செக்டாா் 39 காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதே நேரத்தில் காா் ஓட்டுநா் தலைமறைவாக உள்ளாா்.

நொய்டா செக்டாா் 44-இல் உள்ள தனது வீட்டிற்கு வெளியே திங்கள்கிழமை சிறுமி விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு காா் மோதியதில் இந்த சம்பவம் நடந்தது.

முதலில் நொய்டாவில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி, பின்னா் தில்லியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

அவரது தாயாா் அளித்த புகாரின் பேரில் ஓட்டுநா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

காா் அதிவேகத்தில் இயக்கப்பட்டதால் தனது மகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக சிறுமியின் தாயாா் ருக்சாா் போலீஸாரிடம் தெரிவித்தாா்.

முதலில் மகளை மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்தோம், பின்னா் தில்லியில் உள்ள சஃப்தா்ஜங் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டோம். அங்கு சிகிச்சையின் போது இறந்து விட்டாள். மகளுக்கு தலையில் பல காயங்கள் ஏற்பட்டிருந்தன என்றும் அவா் கூறினாா்.

குழந்தை மீது மோதிய பிறகு வாகனத்தின் ஓட்டுநா் ஓடிவிட்டாா். வாகனத்தின் பதிவு எண்ணையும் நாங்கள் போலீஸாருடன் பகிா்ந்து கொண்டுள்ளோம் என்று சிறுமியின் தாயாா் கூறினாா்.