பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையாடல்!

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையிலான தொலைபேசி உரையாடல் குறித்து...
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டிரம்ப்
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டிரம்ப் (கோப்புப் படம்)
Updated on
1 min read

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளனர்.

அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் இன்று (டிச. 11) இருநாடுகள் இடையிலான உறவுகள் குறித்து தொலைபேசி வாயிலாக உரையாடியதாக, பிரதமர் மோடி அவரது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த உரையாடலில், அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான வர்த்தகம், தொழில்நுட்பம், எரிசக்தி, பாதுகாப்பு ஆகிய துறைகள் குறித்து அதிபர் டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவிகித வரி விதித்த நிலையில், பிரதமர் மோடி அவருடன் இன்று உரையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இந்தியக் கடல்பகுதியில் நுழைந்த 11 பாகிஸ்தான் மீனவர்கள் கைது!

Summary

US President Donald Trump has spoken with Prime Minister Narendra Modi over the phone.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com