டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

இந்தியக் கடல்பகுதியில் நுழைந்த 11 பாகிஸ்தான் மீனவர்கள் கைது!

குஜராத்தில், இந்தியக் கடல்பகுதியில் நுழைந்த பாகிஸ்தான் மீனவர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து...

News image

இந்தியக் கடல்பகுதியில் மீன்பிடித்த பாகிஸ்தான் மீனவர்கள் 11 பேர் கைது... - எக்ஸ்/ PRO Defence Gujarat

Updated On :11 டிசம்பர் 2025, 6:56 pm IST

குஜராத்தில், இந்தியக் கடல்பகுதியில் சட்டவிரோதமாக நுழைந்த பாகிஸ்தான் மீனவர்கள் 11 பேர் கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்சு மாவட்டத்தில் ஜக்கோவ் கிராமத்தின் அருகில் இந்தியக் கடல்பகுதியில், நேற்று (டிச. 10) அனுமதியின்றி நுழைந்த பாகிஸ்தானைச் சேர்ந்த மீனவப் படகு ஒன்றை, கடலோரக் காவல் படையினர் சுற்றிவளைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, அந்தப் படகில் இருந்த 11 பாகிஸ்தான் மீனவர்களைக் கைது செய்த இந்திய அதிகாரிகள், அவர்களை ஜக்கோவ் துறைமுகத்துக்கு அழைத்து வந்துள்ளனர்.

இத்துடன், அவர்களது படகையும் கடலோரக் காவல் படை அதிகாரிகள் சிறைப்பிடித்து சோதனைகள் மேற்கொண்டதாகவும், கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சில நாள்கள் முன்பு எல்லையைக் கடந்து மீன்பிடித்த இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளின் மீனவர்கள் மனிதநேயத்தின் அடிப்படையில் தாயகங்களுக்குத் திருப்பி அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

In Gujarat, 11 Pakistani fishermen who were illegally fishing in Indian territorial waters have been arrested by the Coast Guard.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.