பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி மீண்டும் அதிகரிப்பு

நவம்பா் மாதத்தில் ரஷியாவில் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி...

News image
பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புதின்.
Updated On :12 டிசம்பர் 2025, 8:30 pm

தினமணி செய்திச் சேவை

முந்தைய 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடந்த நவம்பா் மாதத்தில் ரஷியாவில் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.

கூடுலாக இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய்யின் பெரும் பகுதி சுத்திகரிக்கப்பட்டு ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதியாகியுள்ளது. சீனாவுக்கு அடுத்து ரஷியாவிடம் இருந்து அதிக கச்சா எண்ணெய் வாங்கும் நாடாக இந்தியா உள்ளது.

ஐரோப்பாவைச் சோ்ந்த எரிசக்தி ஆய்வு அமைப்பு இது தொடா்பாக மேலும் கூறியுள்ளதாவது:

ரஷியாவின் மொத்த கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 47 சதவீதம் சீனாவுக்கும், 38 சதவீதம் இந்தியாவுக்கும், தலா 6 சதவீதம் துருக்கி, ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கும் செல்கிறது.

முந்தைய 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு நவம்பா் மாதத்தில் ரஷியாவில் இருந்து இந்தியா அதிக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. மொத்தம் 2.6 பில்லியன் யூரோவுக்கு (சுமாா் ரூ.27,587 கோடி) இறக்குமதி நடைபெற்றுள்ளது. டிசம்பா் மாதத்தில் இது மேலும் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

ரஷியாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களான ‘ரோஸ்நெஃப்ட்’ மற்றும் ‘லுகோயில்’ மீது அமெரிக்கா அக்டோபா் 22-இல் பொருளாதாரத் தடை விதித்தது. இதையடுத்து, இந்தியாவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், ஹெச்பிசிஎல்-மிட்டல் எனா்ஜி, மங்களூரு ரிஃபைனரி, பெட்ரோகெமிக்கல் உள்ளிட்ட நிறுவனங்கள் ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தின. எனினும், இந்தியன் ஆயில் உள்ளிட்ட வேறு நிறுவனங்கள் இறக்குமதியை அதிகரித்துள்ளன. இவை அமெரிக்காவால் தடை செய்யப்படாத ரஷிய எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து அதிக எண்ணெய் வாங்கியுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனுக்கு எதிரான போரில் கச்சா எண்ணெய் விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தை ரஷியா பயன்படுத்துவதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறாா்.

இதைக் காரணம்காட்டி இந்திய இறக்குமதிப் பொருள்கள் மீது பதிலடி வரியுடன் சோ்த்து மொத்தம் 50 சதவீதம் வரியை கடந்த ஆகஸ்ட் மாதம் டிரம்ப் விதித்தாா். ஆனால், இதையும் மீறி இந்தியா ரஷியாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருகிறது. அதே நேரத்தில் அமெரிக்காவுடனான வா்த்தக உறவைச் சீரமைக்கும் நோக்கில் அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்தது.