பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

சநாதனத்துக்கு எதிராக மாறிவரும் மாநிலம்! திருப்பரங்குன்றம் குறித்து மக்களவையில் அனுராக் தாக்கூர்

சநாதனத்துக்கு எதிராக மாறிவரும் மாநிலம்! திருப்பரங்குன்றம் குறித்து மக்களவையில் அனுராக் தாக்கூர்

News image

அனுராக் தாக்கூர்

Updated On :12 டிசம்பர் 2025, 5:55 pm IST

புது தில்லி: நாட்டில் ஒரு மாநிலம், சநாதனத்துக்கு எதிரான மாநிலமாக மாறி வருகிறது என்று திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து மக்களவையில் அனுராக் தாக்கூர் பேசியுள்ளார்.

இவரது பேச்சுக்கு மக்களவை திமுக எம்பிக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.

மக்களவையில் இன்று பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் பேசுகையில், இந்த அவையில் ஒரு முக்கிய விவகாரத்தை எழுப்ப விரும்புகிறேன். நாட்டில் ஒரு மாநிலம் சநாதனத்துக்கு எதிரான மாநிலமாக மாறி வருகிறது. அந்த மாநிலத்தில் உள்ள அமைச்சர்கள். சநாதனத்துக்கு எதிராக அறிக்கை வெளியிடுகிறார்கள். கோயிலுக்குச் செல்வதற்கு, பக்தர்கள் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தீபம் ஏற்ற கோயிலுக்குச் சென்றால், அங்கு அனுமதி மறுக்கப்படுகிறது. தீபம் ஏற்ற நீதிமன்றத்தை நாட வேண்டியிருக்கிறது.

தமிழகத்தின் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவை செயல்படுத்தாத தமிழக அரசுக்கு, உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கடுமையான விமர்சனத்தையும் முன் வைத்துள்ளது. அதற்காகப் போராடிய ஹிந்து பக்தர்கள் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது.

அங்கு நீதிமன்ற அவமதிப்பு நடந்துள்ளது. ஏன் ஒரு ஹிந்துக் கோயிலில், பக்தர்களை தீபம் ஏற்ற அரசு அனுமதிக்கவில்லை என்று கூறினார்.

அனுராக் தாக்கூர் இவ்வாறு பேசியபோது, இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக எம்.பி.க்கள் அவையின் முன் பகுதிக்கு வந்து கோஷம் எழுப்பினர். இதனால், அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது. அமைதி ஏற்படுத்த எடுத்த முயற்சிகள் பலனளிக்காததால் அவை சற்று நேரம் ஒத்திவைக்கப்பட்டு பிறகு கூடியது.

Summary

The state is changing against Sanathanam! Anurag Thakur in Lok Sabha on Thiruparankundram

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.