சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

பல்லாயிரம் கிளிகளுக்கு உணவளித்த சேகர் காலமானார்!

கேமரா ஹவுஸ் சேகர் காலமானார்....

News image

கேமரா ஹவுஸ் சேகர்

Updated On :12 டிசம்பர் 2025, 10:44 am IST

சென்னையில் தினமும் பல ஆயிரம் கிளிகளுக்கு உணவளித்து வந்த சேகர் உடல்நலக்குறைவால் காலமானார்.

பறவை மனிதர் என இந்தியளவில் கவனிக்கப்பட்டவர் ஜோசஃப் சேகர். சென்னை ராயப்பேட்டையில் கேமரா பழுதுபார்க்கும் பணியைச் செய்து வந்தபோது தன் அலுவலக மாடிப்பகுதியில் (அவர் வீடு) ஒன்றிரண்டு கிளிகளுக்கு உணவளித்து வந்தவரைத் தேடி கடந்த 20 ஆண்டுகளாக பல்லாயிரம் கிளிகள் வரத்தொடங்கியது.

கேமராக்களை சேகரிக்கும் பழக்கமும் இருந்ததால் இவரை மேமரா ஹவுஸ் சேகர் என்றே அழைத்து வந்தனர். ஆனால், நாளடைவில் ஆயிரக்கணக்கான கிளிகள் உணவுக்காக அவரைத் தேடி வந்தபோது, ‘பறவை மனிதர்’ (bird man) என அழைக்கப்பட்டார்.

உலகளவில் பல முன்னணி சுற்றுச்சூழல் பத்திரிகைகள், நிறுவனங்கள் கிளிகள் ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் கூடுவதைக் கண்டு ஆச்சரியமடைந்து சேகரை நேர்காணலும் செய்திருக்கின்றன.

கிளிகளுக்கு உணவு வைக்கும்போது.

கிளிகளுக்கு உணவு வைக்கும்போது.

வாடகை வீட்டில் வசித்து வந்ததால் கட்டட உரிமையாளர் சேகரிடம் வீட்டை காலி செய்யச் சொல்லியிருக்கிறார். ஆனால், இந்த வீட்டைவிட்டுச் சென்றால், கிளிகளுக்கு உணவளிக்க முடியாது என்பதால் தன் கேமரா சேமிப்புகளை மொத்தமாக விற்பனை செய்து அதனால் வரும் பணத்தில் கட்டடத்தை வாங்கலாம் என்கிற திட்டத்திலும் இருந்தார். ஆனால், அது நடக்கவில்லை.

கடந்த சில ஆண்டுகளாகவே இப்பிரச்னையால் நிறைய விஷயங்களை இழந்துவிட்டதாகக் கூறியிருக்கிறார். வீட்டை காலி செய்தபின் கடந்த 2 ஆண்டுகளாக கிளிகளுக்கு உணவளிக்க முடியாத வருத்ததையும் பதிவு செய்தார்.

Story image

இந்த நிலையில், தமிழகத்தின் பறவை மனிதரான சேகர் நேற்று (டிச. 11) இரவு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பால் சென்னையில் காலமானார். இவரது மறைவிற்கு பறவை ஆர்வலர்கள், ஒளிப்பதிவு துறையினர் உள்பட பலரும் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.