மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் பெயரை மத்திய அரசு மாற்றுவது குறித்து காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.
'மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்ட'த்தை விரிவுபடுத்தி 'புஜ்ய பாபு ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்'(Pujya Bapu Rural Employment Scheme) என மத்திய பாஜக அரசு பெயர் மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் பதிலளிக்கையில்,
"திட்டங்களுக்கும் சட்டங்களுக்கும் பெயர் மாற்றுவதில் பிரதமர் மோடியின் அரசு நிபுணத்துவம் பெற்றது. அவர்களை யாராலும் மிஞ்ச முடியாது. அவர்கள் நிர்மல் பாரத் அபியானை, ஸ்வச் பாரத் அபியான் என்றும், கிராமப்புற எல்பிஜி விநியோகத் திட்டத்தை உஜ்வாலா என்றும் பெயர் மாற்றினார்கள்.
அவர்கள் திட்டங்களை வடிவமைப்பதிலும் விளம்பரப்படுத்துவதிலும் பெயர்களை மாற்றுவதிலும் வல்லுநர்கள். ஆச்சரியப்படும் விதமாக, பண்டிட் நேருவை வெறுப்பது போலவே மகாத்மா காந்தியையும் வெறுப்பதாகத் தெரிகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் 2005 முதல் நடைமுறையில் உள்ளது. இப்போது அதன் பெயரை மாற்றுகிறார்கள். மகாத்மா காந்தி என்ற பெயரில் என்ன தவறு இருக்கிறது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் கூட்டத்தொடர் குறித்து பேசிய அவர்,
"நாடாளுமன்றத்தில் சில மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்படும், சில நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கிறோம். அணுசக்தி மசோதா, நாடாளுமன்றக் குழுவிற்கு அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கிறோம். உயர்கல்வி ஆணையத்திற்கான ஒரு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது, அதை குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம்.
பங்குச் சந்தை தொடர்பான பல்வேறு சட்டங்களை ஒருங்கிணைத்து ஒரு சட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது, அதையும் குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்று நாங்கள் கோரியுள்ளோம்.
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவிடம் நான் பேசினேன், இந்த மூன்று முக்கிய மசோதாக்களையும் நிலைக்குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். எனது கோரிக்கை நியாயமானது என்றும் அதை பரிசீலிப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்" என்றார்.
Summary
Congress MP Jairam Ramesh says What is wrong with the name Mahatma Gandhi?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உறவினர்களுக்கு கோயில் நிலத்தை பத்திரப் பதிவு செய்தேனா? அமைச்சர் ரமேஷ் விளக்கம்!

கேரளத்தில் ரூ. 40 கோடி போதைப்பொருள்கள் பறிமுதல்! ரமேஷ் சென்னிதலா

சட்ட நகல் எரிப்பு போராட்டம்: மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினா் கைது

இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government



