6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தில்லிக்குப் படையெடுத்த காங். தலைவர்கள்: வாக்குத் திருட்டுக்கு எதிராக நாளை போராட்டம்!

தில்லி ராம்லீலா திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் போராட்டம் பற்றி...

News image
காங்கிரஸ் போராட்டம் நடைபெறவுள்ள ராம்லீலா திடல் அலங்கரிக்கப்படும் காட்சி - PTI
Updated On :13 டிசம்பர் 2025, 4:37 pm

இணையதளச் செய்திப் பிரிவு

புது தில்லி: வாக்குத் திருட்டுக்கு எதிராக நாளை(டிச. 14) காங்கிரஸ் போராட்டத்தில் ஈடுபடுவதையடுத்து, இந்தப் போராட்டத்தில் பங்கேற்க அக்கட்சியின் பல்வேறு மாநில தலைவர்கள் தலைநகரைச் சென்றடைந்தனர்.

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசுக்கு எதிராக காங்கிரஸ் கையிலெடுத்துள்ள ‘வாக்குத் திருட்டு’ விவகாரம் தேசிய அளவில் பூதகரமாக உருவெடுத்துள்ளது.

இந்த நிலையில், தில்லி ராம்லீலா திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க தமது ஆதரவாளர்களுடன் சென்றுள்ள கர்நாடக துணை முதல்வர் டி. கே. சிவகுமார் பேசும்போது, “வாக்காளர்களின் உரிமைகளை நீங்கள் பறித்துச் செல்ல முடியாது என்ற செய்தியை நாட்டுக்கு அனுப்புவதற்காகவே இந்தப் போராட்டத்தில் பங்கேற்க வருகை தந்திருக்கிறோம். ஜனநாயகத்தையும் அரசமைப்பையும் பாதுகாக்கவே நாங்கள் அனைவரும் போராடுகிறோம்” என்றார்.

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான பூபேஷ் பாகல் பேசும்போது, “தீர்க்கமான போராட்டத்தை நோக்கி காங்கிரஸ் கட்சி ஒரு அடியையெடுத்து வைத்துள்ளது. இந்தப் போராட்டத்தில் திரளான மக்கள் பங்கேற்பார்கள்” என்றார்.

இதனிடையே, காங்கிரஸின் போராட்டத்தை விமர்சித்துள்ள அஸ்ஸாம் முதல்வர் டாக்டர் ஹிமந்த பிஸ்வ சர்மா பேசும்போது, “ராகுல் காந்திக்கு மதிப்பேயில்லை. இன்று அவர் ஒரு போராட்டத்தில் ஈடுபடுவார்; அதனைத்தொடர்ந்து, ஏதேனுமொரு வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வார். கிறிஸ்துமஸ், புத்தாண்டை எங்கே கொண்டாடப் போகிறார்? என்பது தெரியவில்லை” என்றார்.

summary

Congress to hold Vote Chor, Gaddi Chhod rally at Ramlila Maidan tomorrow

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.